1. "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?" என்று கேட்டு இயேசுவை சோதித்தவர்கள் யார்?
2. "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்." இதைக் கூறியவர் யார்? இதில் "அவர்" என்று குறிப்பிடப்படுவது யாரை?
3. சிறுபிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று இயேசுவிடம் கொண்டு வந்தவர்களை சீடர்கள் அதட்டினர். அதற்கு இயேசு கூறியது என்ன?
4. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசு கூறியவுடன் சீடருக்கு வீட்டில் மீண்டும் கூறியது என்ன?
5. இறையாட்சியை -------------- ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
6. நல்ல போதகரே நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு இயேசு கூறியது என்ன?
7. போதகரே! இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் என்று கூறியதற்கு இயேசு கூறியது?
8. சீடர்களை திகைப்புக்குள்ளாக்கிய இயேசுவின் வார்த்தைகள் யாவை?
9. யார்தாம் மீட்பு பெறமுடியும் என்று சீடர்கள் கூறியதற்கு இயேசுவின் பதில் என்ன?
10. பாரும். நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே! என்ற பேதுருவிடம் இயேசு கூறியது என்ன?
11. இயேசு தம் சாவை முன்னறிவித்தது எப்பகுதியில் இடம்பெற்றுள்ளன?
12. செபதேயுவின் மக்கள் யாவர்?
13. தலைவர்களைப்பற்றி இயேசு கூறியது என்ன?
14. பர்த்திமேயு – சிறுகுறிப்பு வரைக
15. பார்வையற்ற பர்த்திமேயு "ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றவரிடம் இயேசு கூறியதும் நடந்ததும் என்ன?