1. இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் இருந்த சீடர்கள் யார்?
2. “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” – இது யார் கூற்று?
3. “போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்.” இதற்கு இயேசுவின் பதில் என்ன?
4. இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வு எங்கே இடம்பெற்றுள்ளது?
5. இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் தோன்றிய இறைவாக்கினர்கள் யாவர்?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக --------------------- அமைப்போம்”
7. இயேசு தோற்றம் மாறியபோது மேகத்திலிருந்து கேட்டது என்ன?
8. இயேசு சீடர்களுக்கு எலியா பற்றி கூறியது என்ன?
9. கோடிட்ட இடத்தை நிரப்புக: அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ------------------------- என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
10. தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல் புதுமை எங்கே இடம்பெற்றுள்ளது?
11. தீய ஆவி பிடித்திருந்த சிறுவனின் தந்தை இயேசுவிடம் வேண்டியது என்ன?
12. இயேசு தீய ஆவியை எவ்வாறு அதட்டினார்?
13. இயேசு தன் சாவை எவ்வாறு முன்னறிவிக்கிறார்?
14. யார் மிகப் பெரியவர் என்ற சீடர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
15. சிறியோரை பாவத்தில் விழச்செய்வோருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று இயேசு கூறுகிறார்?