1. கோடிட்ட இடத்தை நிரப்புக: இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன் தானே! -------------, ---------------, --------------, -------------- ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
2. தொழுகைக்கூடத்தில் கற்பித்த இயேசுவைக் கண்டு அதைக்கேட்டு மக்கள் வியப்பில் கூறியது என்ன?
3. “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” – இது யார் கூற்று?
4. இருவர் இருவராக பணிக்கு அனுப்புமுன் இயேசு சீடர்களுக்கு அறிவுறுத்தியது என்ன?
5. இயேசுவால் அனுப்பப்பட்ட சீடர்கள் செய்த நற்காரியங்கள் என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: பயணத்திற்குக் ---------------- தவிர --------------, ----------------, --------------- முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.
7. இயேசுவின் பெயர் எங்கும் பரவியபோது, மக்கள் அவரை எவ்வாறு அழைத்தனர்?
8. இயேசுவைப் பற்றி கேள்விபட்டவுடன் ஏரோது கூறியது என்ன?
9. "உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல“ – இதில் வரும் சகோதரர் யார்?
10. ஏரோதியா - சிறு குறிப்பு வரைக:
11. ஏரோதியாவின் மகள் ஏரோதிடம் கேட்ட பரிசு என்ன?
12. ஏரோதியாவின் மகள் தன் பிறந்த நாளில் நடனமாடியவுடன் ஏரோது என்ன சொன்னான்?
13. "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?" இயேசுவின் இந்த கேள்விக்கு சீடர்களின் பதில் என்ன?
14. அப்பம் உண்ட ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15. எஞ்சிய அப்பத் துண்டுகளையும், மீன் துண்டுகளையும் எத்தனை கூடைகள் நிறைய எடுத்தனர்?