மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 78
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 5
முடிவுத் திகதி : 2020-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கெரசேனர் பகுதியைச் சேர்ந்த தீய ஆவி பிடித்தவர் பற்றி விளக்குக?

கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்.
அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை.
ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார்.
எவராலும் அவரை அடக்க இயலவில்லை.
அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

2. தீய ஆவி பிடித்தவர் இயேசுவைப் பார்த்து உரத்தக்குரலில் சொன்னது என்ன?

இயேசுவே, உன்னத கடவுளின் மகனே
உமக்கு இங்கு என்ன வேலை?
கடவுள் மேல் ஆணை!
என்னை வதைக்க வேண்டாம்
இயேசுவே என் ஆண்டவர்

3. „தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ“ – இது யார் கூற்று?

பேதுரு
பவுல்
பிலிப்பு
மரியா
இயேசு

4. இலேகியோன் – குறிப்பு வரைக:

தீய ஆவி பிடித்தவர் பெயர்
நாங்கள் பலர்
இத்தீய ஆவி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை?” என்று உரத்தக் குரலில் கத்தியது.
இத்தீய ஆவியை நோக்கி இயேசு, “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப்போ” என்று கூறினார்.
என் ஆண்டவரே, என்னை மன்னியும்.

5. தீய ஆவிகள் வெளியேறி யாருடைய உடலில் புகுந்தன?

மாடுகள்
பன்றிகள்
மக்கள்
பறவைகள்
மரங்கள்

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"ஏறக்குறைய ------------------------- அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது."

ஐந்தாயிரம் பன்றிகள்
நான்காயிரம் பன்றிகள்
மூன்றாயிரம் பன்றிகள்
இரண்டாயிரம் பன்றிகள்
ஆயிரம் பன்றிகள்

7. “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்”. இது யார் கூற்று? யாரிடம் கூறியது?

இயேசு சீடர்களிடம்
இயேசு பிலாத்துவிடம்
இயேசு பேய்பிடித்திருந்தவரிடம்
இயேசு யாயிரிடம்
இயேசு பெண்களிடம்

8. யாயிர் என்பவர் யார்?

தொழுகைக்கூடத் தலைவர்
இவரின் மகள் சாகுந்தறுவாயில் இருந்தாள்.
இயேசுவின் காலில் விழுந்தார்.
இவர், “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று இயேசுவை வருந்தி வேண்டினார்.
இவர் இயேசுவின் சீடர்

9. இந்த ஐந்தாம் அதிகாரத்தில் உள்ள குணமடைந்தோர் யார்?

இலேகியோன் என்ற பேய்பிடித்தவர்
யாயிரின் மகள்
பேதுருவின் மாமியார்
பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண்
தொழுநோயாளர்

10. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணைப் பற்றி கூறுக?

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்தினார்
மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர்
அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது
அவர் இயேசுவின் மேலுடையைத் தொட்டார்
தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்று போயிற்று

11. “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு”. இது யார் கூற்று?

யாயிரின் மகள்
இலெகியோன்
இயேசு
பேதுரு
பவுல்

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“அவர் --------, ----------------, யாக்கோபின் சகோதரரான ----------- ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.“

இயேசு
பேதுரு
யாக்கோபு
யோவான்
பவுல்

13. தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டில் மக்கள் அழுவதைக் கண்டு, இயேசு கூறியது என்ன?

ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை?
தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ
சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்
உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று
அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு

14. தலித்தா கூம் என்றால் என்ன?

உனது நம்பிக்கை உன்னைக் குணமாயிற்று
ஏன் இந்த அழுகை?
சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு
என் மேலுடையைத் தொட்டவர் யார்?
அஞ்சாதீர்

15. யாயிர் மகளின் வயது என்ன?

பதினொன்று
பன்னிரண்டு
பதிமூன்று
பதினான்கு
பதினைந்து