மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 76
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 2, 3
முடிவுத் திகதி : 2020-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி இயேசுவிடம் கொண்டுவரப்பட்டவர் யார்?

பேதுரு
முடக்குவாதமுற்றவர்
நூற்றுவர் தலைவன்
பவுல்
சமாரியன்

2. “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” – இது யார் கூற்று?

முடக்குவாதமுற்றவர்
இயேசு
பேதுரு
யூதர்கள்
லேவி

3. இயேசு முடக்குவாதமுற்றவரை குணமாக்கியவுடன் மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்தின் எண்ணியது என்ன?

இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?
இவன் கடவுளைப் பழிக்கிறான்.
கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன
எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட

4. இயேசு மறைநூல் அறிஞர்களை நோக்கி கூறியது என்ன?

போலி தீர்க்கதரிசிகளே!
உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?
முடக்குவாதமுற்ற இவனிடம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா?
எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்பதா? எது எளிது?
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

5. எந்த ஊரில் இயேசு முடக்குவாதமுற்றவரை குணமாக்கினார்?

கலிலேயா
ஜெருசலேம்
எகிப்து
சீனாய் மலை
கப்பர்நாகும்

6. “நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துகொண்டு உனது வீட்டுக்குப் போ” – இயேசு யாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்?

மறைநூல் அறிஞர்
பேதுரு
சீடர்கள்
முடக்குவாதமுற்றவர்
கிறிஸ்து

7. லேவி – சிறுகுறிப்பு வரைக:

பேதுருவின் மகன்
சமாரியன்
அல்பேயுவின் மகன்
சுங்கச்சாவடியில் பணிபுரிந்தவர்
இயேசு அழைத்தவுடன் அவரை பின்பற்றிச் சென்றார்


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“இவர் --------------------- -------------------------- சேர்ந்து உண்பதேன்?”

கடவுளோடும்
வரித்தண்டுபவர்களோடும்
இயேசுவோடும்
பாவிகளோடும்
மரியாவோடும்

9. “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்ற கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.
ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்? கிழிசலும் பெரிதாகும்.
அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும்.
புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே --------------------- தேவை“

மருத்துவர்
பாவிகள்
யூதர்கள்
சமாரியர்கள்
சீடர்கள்

11. “பாரும், ஓய்வு நாளில் செய்யகூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?“ என்ற பரிசேயரின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?
அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார்.
ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது
மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.
ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே

12. இயேசுவைக் காண எந்தெந்த பகுதியிலிருந்து மக்கள் கூடினர்?

எருசலேம்
இதுமேயா
யோர்தான் அக்கரைப்பகுதி
தீர்
சீதோன்

13. இயேசு திருத்தூதர்களை ஏன் அழைத்தார்?

தம்மோடு இருக்க
நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்பட
பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க
தனக்கு பணிவிடைசெய்ய
பொருள் சேர்க்க

14. இயேசுவின் திருத்தூதர்கள் யாவர்?

பேதுரு, அந்திரேயா , தீவிரவாதியான சீமோன்
செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான்
பிலிப்பு, பர்த்தலமேயு, யூதாஸ்
மத்தேயு, தோமா, ததேயு
அல்பேயுவின் மகன் யாக்கோபு

15. பொவனேர்கேசு என்றால் என்ன?

மண்ணின் மக்கள்
இடியைப் போன்றோர்
செபதேயுவின் மக்கள்
இயேசுவின் சீடர்கள்
இறைவனின் தாய்