1. மோசே மலையினின்று இறங்கி வரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனை நோக்கிக் கூறியது என்ன?
2. கோடிட்ட இடத்தை நிரப்புக: “உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் --------------- கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்”
3. இஸ்ரயேல் மக்களிடம் பெற்ற பொற்காதணிகளைக் கொண்டு ஆரோன் எதை உருவாக்கினார்?
4. ஆரோன் உருவாக்கிய பொற்கன்றைக் கண்டவுடன் இஸ்ரயேல் மக்கள் கூறியது என்ன?
5. பொற்கன்றை வணங்கியதால் இஸ்ரயேல் மக்களைக் குறித்து மோசேயிடம் ஆண்டவர் கூறியது என்ன?
6. இஸ்ரயேல் மக்கள் மீது கோபம் கொண்ட ஆண்டவரிடம் மோசே மன்றாடியது என்ன?
7. “நாளைய தினம் ஆண்டவரின் விழா“ – இது யார் கூற்று?
8. மோசே மலையிலிருந்து இறங்கியபோது கொண்டுவந்தது என்ன?
9. “இது பாளையத்திலிருந்து எழும் போர்முழக்கம்” – இது யார் கூற்று?
10. பொற்கன்று சிலை வணக்கத்தைக் கண்டவுடன் மோசே செய்தது என்ன?
11. மோசேயின் சினத்தைக்கண்ட ஆரோன் கூறியது என்ன?
12. மோசேயின் வாக்குக்கிணங்காதோர் எத்தனை பேர் மடிந்தனர்?
13. "ஆண்டவர் பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்” – இது யார் கூற்று?
14. மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து மன்றாடியது என்ன?
15. “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” – இது யார் கூற்று?