மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 69
வேதாகமப் பகுதி : விடுதலைப்பயணம் 28, 29
முடிவுத் திகதி : 2019-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. குருத்துவப்பணி ஆற்ற ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள் யாவர்?

ஆரோன்
நாதாபு
அபிகூ
எலயாசர்
இத்தாமர்

2. ஆரோனுக்காக தயாரிக்கப்பட்ட குருத்துவ திருவுடைகள் யாவை?

மார்புப்பட்டை
ஏப்போது
அங்கி
கோடிட்ட உள்ளாடை
தலைப்பாகை, இடைக்கச்சை

3. ஏப்போது என்ற குருத்துவ திருவுடை எந்தெந்த பொருள்களால் அமைக்கப்படவேண்டும்?

பொன்
நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூல்
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டு
வெள்ளி
மஞ்சள் நிறநூல்

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„-------------------------- இரண்டு எடுத்து சுவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.“

பொன்
கடவுள்
இஸ்ரயேல் மக்கள்
பன்னிற மணிக்கற்கள்
மோசே

5. கோடிட்ட இடத்தை நிரப்புக;

„-------------- அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும் ஆண்டவர் திருமுன் நினைவுச்சின்னமாகத் தாங்கி நிற்பான்.“

மோசே
நாதாபு
அபிகூ
எலயாசர்
ஆரோன்

6. மார்புப்பட்டை எப்படி அமையவேண்டு என்று ஆண்டவர் வலியுறுத்துகிறார்?

தீர்ப்புக் கூறும் மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமைய வேண்டும்.
அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்
அது இரண்டாக மடிந்ததாயும், நீளம் ஒரு சாண், அகலம் ஒரு சாண் என்று வடிவமானதாயும் இருக்கவேண்டும்.
அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய்
அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.

7. மார்புப்பட்டையின் முதல் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?

வெள்ளி
தங்கம்
பதுமராகம்
புட்பராகம்
மரகதம்


8. மார்புப்பட்டையின் இரண்டாம் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?

புட்பராகம்
மரகதம்
மாணிக்கம்
நீலமணி
வைரம்

9. மார்புப்பட்டையின் மூன்றாம் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?

செம்பு
வைடூரியம்
செவ்வந்திக்கல்
வைரம்
நீலமணி

10. மார்புப்பட்டையின் நான்காம் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?

படிகப்பச்சை
கோமேதகம்
கடல் வண்ணக்கல்
தங்கம்
வெள்ளி

11. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்ப -------------------- பெயர்களைக் கொண்டிருக்கும்."

பத்து
பதினொன்று
பன்னிரண்டு
பதிமூன்று
பதினான்கு

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"தீர்ப்புக் கூறும் மார்புப்பட்டையில் ------------------, ----------------- இட்டு வைப்பாய்."

ஊரிமையும்
ஆரோனையும்
மோசேவையும்
மார்புப்பட்டையும்
தும்மிமையும்

13. குருத்துவ திருநிலைப்பாட்டின்போது படைக்கப்படும் உணவுக் காணிக்கை என்ன?

ஓர் இளங்காளை
இரு செம்மறிக்கிடாய்
கோதுமை மாவினால் ஆன புளிப்பற்ற அப்பம்
எண்ணெயில் பிசைந்த புளிப்பற்ற நெய்யப்பம்
எண்ணெய் தோய்ந்த புளிப்பற்ற மெல்லிய அடைகள்

14. ஆண்டவர் வலியுறுத்தும் அன்றாட வழிபாடு யாது?

ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்
ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.
இரண்டு படி அளவில் பத்தில் ஒரு மெல்லிய மாவை ஆட்டிப்பிழிந்த கால் கலயம் அளவு எண்ணெயில் கலந்து அதையும், நீர்மப்படையலாகக் கால் கலயம் அளவு திராட்சைப்பழ இரசத்தையும் ஒரு செம்மறிக்குட்டியோடு படைப்பாய்.
மாலை மங்கும் வேளையில் மற்றச் செம்மறிக்குட்டியைப் பலியிடுவாய்.
காலையில் செய்ததுபோலவே, உணவுக் காணிக்கைகளோடு நீர்மப்படையலையும் சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாக நெருப்புப் பலியாக்குவாய்.

15. ஆரோன் மற்றும் அவர் புதல்வர்களின் திருநிலைப்பாடு எத்தனை நாள்கள் நடந்தன?

நான்கு நாள்கள்
ஐந்து நாள்கள்
ஆறு நாள்கள்
ஏழு நாள்கள்
எட்டு நாள்கள்