மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 67
வேதாகமப் பகுதி : விடுதலைப்பயணம் 23, 24
முடிவுத் திகதி : 2019-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“--------------, புரளியை நீ கிளப்பவேண்டாம்”

உண்மை
பொய்
தீ
காற்று
தூய ஆவி

2. ஆண்டவர் உரைத்த நீதியும் இரக்கமும் நிறைந்த சட்டங்கள் யாவை?

கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே
நீதியைத் திரித்துச் சான்று சொல்லவேண்டாம்
எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே
உன் பகைவரின் வழித்தவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு
உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்துவிடாதே

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“---------------- வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.”

பணம்
பை
கையூட்டு
பிச்சை
இறைச்சி

4. ஓய்வு ஆண்டில் செய்யவேண்டியது என்ன?

ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலைச் சேமித்து வைப்பாய்
ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும் தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய்.
உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும்.
அவர்கள் விட்டுவைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும்.
உன் திராட்சைத் தோட்டத்திற்கும், உன் ஒலிவத் தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய்

5. ஓய்வு நாளில் கடைப்பிடிக்கவேண்டியது என்ன?

ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்
ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய்
இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வு கிடைக்கும்
உன் அடிமைப் பெண்ணின் பிள்ளையும் அன்னியரும் இளைப்பாறுவர்
ஓய்வு நாளில் படிக்கவேண்டும்

6. முப்பெரும் விழாக்கள் யாவை?

புளிப்பற்ற அப்பவிழா
கேவலார் விழா
அறுவடை விழா
உயிர்ப்பு விழா
சேகரிப்பு விழா

7. முப்பெரும் விழாவை எப்போது, எப்படி கொண்டாடவேண்டும்?

புளிப்பற்ற அப்பவிழாவை நீ கொண்டாடவேண்டும். நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபிபு மாதத்தில் குறிக்கப்பட்ட காலத்தில் ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பம் உண்பாய்
வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, “அறுவடை விழா”வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் “சேகரிப்பு விழா”வும் எடுக்கவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அப்ப விழாவைக் கொண்டாடவேண்டும்
ஒவ்வோர் ஆண்டும் அறுவடை விழாவைக் கொண்டாடவேண்டும்
ஒவ்வொரு நாளும் சேகரிப்பு விழாவைக் கொண்டாடவேண்டும்


8. ஆண்டவர் தூதரைக் குறித்து எச்சரித்தது என்ன?

இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
அவர்முன் எச்சரிக்கையாயிரு. அவர் சொல்கேட்டு நட.
அவரை எதிர்ப்பவனாய் இராதே.
உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.
நீ அவர் சொல்கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்.

9. ஆண்டவரைக் காண, சீனாய் மலைமேல் ஏறிச்சென்றவர்கள் யாவர்?

ஆரோன்
நாதாபு
அபிகூ
மோசே
எழுபது பெரியோர்கள்

10. ஆண்டவரின் வார்த்தைகளையும், விதிமுறைகளையும் அறிவித்தப்பின் மக்கள் ஒரே குரலாகச் சொன்னது என்ன?

ஆண்டவரே போற்றி
ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்.
உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய்
நீ அவர்கள் தெய்வங்களை வழிபடுவது உனக்குக் கண்ணியாக அமையும்
உன் வாழ்நாளின் எண்ணிக்கையை நான் நிறைவு செய்வேன்

11. மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து கூறியது என்ன?

இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ
ஆண்டில் மூன்றுமுறை நீ எனக்கு விழா எடுப்பாய்
ஆண்டில் மூன்றுமுறை உன் ஆண்மகவு ஒவ்வொன்றும் தலைவராகிய ஆண்டவர் திருமுன் வரவேண்டும்.
அன்னியரை நீ ஒடுக்காதே
அன்னியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்

12. சீனாய் மலைமேல் ஏறியவுடன் அவர்கள் கண்டது என்ன?

இஸ்ரயேலின் கடவுளைக் கண்டார்கள்
அவர் பாதங்களின் கீழுள்ள தளம் நீல மணிக்கல் இழைத்த வேலைப்பாடு போன்றும், தெள்ளிய வான்வெளி போன்றும் இருந்தது.
இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் மேல் அவர் கைவைக்கவில்லை
அவர்கள் கடவுளைக் கண்டனர்
உண்டு குடித்தனர்

13. மோசே கடவுளின் மலையின்மேல் ஏறிச் செல்கையில் பெரியோர்களை நோக்கிக் கூறியது என்ன?

என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு
அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்
நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இவ்விடத்திலேயே எங்களுக்காகக் காத்திருங்கள்
இதோ ஆரோனும், கூரும் உங்களோடு இருக்கிறார்கள்
வழக்கு எதுமிருப்பவன் அவர்களை அணுகட்டும்

14. மோசே மலைமேல் ஏறிச்சென்றவுடன் எத்தனை நாள்கள் மேகம் மலையை மூடியிருந்தது?

இரண்டு நாள்கள்
மூன்று நாள்கள்
நான்கு நாள்கள்
ஐந்து நாள்கள்
ஆறு நாள்கள்

15. மோசே மலையில் எத்தனை நாள்கள் தங்கியிருந்தார்?

நாற்பது இரவுகள்
நாற்பது பகல்கள்
நாற்பது பகலும் நாற்பது இரவும்
ஐம்பது பகலும் ஐம்பது இரவும்
அறுபது பகலும் அறுபது இரவும்