மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 64
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 17, 18
முடிவுத் திகதி : 2019-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. "மாசா" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?

சோதித்தல்
பெறுதல்
வாங்குதல்
செபித்தல்
சிரித்தல்

2. "மெரிபா" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?

உட்காருதல்
விளையாடுதல்
வாதாடுதல்
செபித்தல்
அழுதல்

3. "இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!" இது யாரின் கூற்று?

ஆண்டவர்
ஆபிரகாம்
ஆரோன்
மோசே
ஆபேல்

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"குடிக்க எங்களுக்குத் -------------- கொடும்"

அப்பம்
தண்ணீர்
திராட்சை இரசம்
சோறு
மாடு

5. தண்ணீருக்காக மோசேவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டது என்ன?

இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்
நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக்கொண்டு போ.
இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன்.
நீ பாறையை அடி
மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்.

6. "நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?" இது யார் கூற்று?

ஆரோன்
யோசுவா
ஆதாம்
ஆண்டவர்
இஸ்ரயேல் மக்கள்

7. இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தவர்கள் யார்?

அந்தியோக்கியர்
யூதர்கள்
சமாரியர்கள்
அமலேக்கியர்
இந்தியர்கள்

8. இஸ்ரயேலர் வெற்றிபெற மோசே செய்தது என்ன?

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்.
அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்.
மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார்.
அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர்.
இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

9. இஸ்ரயேலர் வெற்றிபெற மோசேயின் கைகளைத் தாங்கிப்பிடித்தவர் யார்?

மோசே
ஆரோன்
யோசுவா
கூர்
அமலேக்கு

10. இத்திரோ – சிறு குறிப்பு வரைக

மிதியானின் அர்ச்சகர்
மோசேயின் மாமனார்
சிப்போராவின் தந்தை
ஆரோனின் மாமனார்
மோசேயின் தந்தை

11. மோசேயின் புதல்வர்கள் யாவர்?

கூர்
யோசுவா
கேர்சோம்
சிப்போரா
எலியேசர்

12. "கேர்சோம்" என்ற பெயரின் பொருள் என்ன?

அயல்நாட்டில் அன்னியனாக உள்ளேன்
என்னைப் பார்வோனின் வாளினின்று காப்பாற்றிய என் மூதாதையரின் கடவுளே என் துணை
ஆண்டவரே போற்றி
ஆண்டவருக்கு நன்றி
அயல்நாட்டில் வாழ்பவன்

13. "எலியேசர்" என்ற பெயரின் பொருள் என்ன?

அயல்நாட்டில் அன்னியனாக உள்ளேன்
என்னைப் பார்வோனின் வாளினின்று காப்பாற்றிய என் மூதாதையரின் கடவுளே என் துணை
ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக
கடவுள் உம்மோடு இருப்பாராக
கடவுளே என் ஆற்றல்

14. மோசேயின் வெற்றியைக்குறித்து இத்திரோ அகமகிழ்ந்து சொன்னது என்ன?

ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக
எகிப்தியர் பிடியினின்றும் பார்வோன் பிடியினின்றும் உங்களை விடுவித்தவர் அவரே
அனைத்துத் தெய்வங்களையும் விட ஆண்டவரே உயர்ந்தவர் என இப்போது உணர்ந்துகொண்டேன்.
ஏனெனில், ஆணவச் செயல்புரிந்த எகிப்தியர் பிடியினின்று மக்களை விடுவித்தவர் அவரே
கடவுளே என் துணை

15. "நீர் செயல்படும் முறை சரியல்ல" இது யார் கூற்று?

மோசே
சிப்போரா
இத்திரோ
யோசுவா
ஆரோன்