மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 62
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 13, 14
முடிவுத் திகதி : 2019-02-28

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"------------- ---------- இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்".

தை மாதத்தின்
ஜனவரி மாதத்தின்
ஆபிபு மாதத்தின்
சிவு மாதத்தின்
சீவான் மாதத்தின்

2. "தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்" – இது யார் கூற்று?

மோசே
ஆண்டவர்
ஆரோன்
ஆபிரகாம்
பார்வோன்

3. புளிப்பற்ற அப்ப விழாவில் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

புளித்த அப்பம் உண்ணலாகாது
ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ணவேண்டும்.
ஏழாம் நாளை ஆண்டவரின் விழாவாகக் கொண்டாடவேண்டும்
ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும்
புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது

4. புளிப்பற்ற அப்ப விழாவை ஏன் ஆண்டுதோறும் கொண்டாடவேண்டும் என்று மோசே சொல்கிறார்?

எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு
ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் இஎகிப்திலிருந்து வெளியேறச்செய்தார்
எனவே ஆண்டுதோறும் இந்த நியமத்தை அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும்
மோசேவை போற்றுவதற்காக
இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைபேறும் எனக்குரியவை

5. இஸ்ரயேலர் கடந்து சென்ற கடல் எது?

சாக்கடல்
யோர்தான் ஆறு
அரபிக்கடல்
செங்கடல்
கலிலேயா கடல்

6. எகிப்திலிருந்து தப்பி செல்லும்போது யாருடைய எலும்புகளை மோசே எடுத்துச்சென்றார்?

ஆபிரகாம்
பார்வோன்
ஈசாக்
ஆரோன்
யோசேப்பு

7. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"பகலில் ------------------ இரவில் ------------------- மக்களை விட்டு அகலவேயில்லை".

ஆண்டவரும்
மேகத்தூணும்
மோசேவும்
நெருப்புத்தூணும்
வெளிச்சமும்


8. "கடவுள் உங்களைச் சந்திக்கும்போது இங்கிருந்து என் எலும்புகளை உங்களோடு எடுத்துச்செல்லுங்கள்". இது யார் கூற்று?

ஆபேல்
ஈசாக்கு
யோசேப்பு
மோசே
ஆரோன்

9. பார்வோன் துரத்தி வருவதைக் கண்ட இஸ்ரயேலர் மோசேவிடம் சொன்னது என்ன?

எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்?
எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே
எங்களை விட்டுவிடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்‘ என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை
ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்.
நாம் இப்படிச் செய்துவிட்டோமே

10. பார்வோன் நெருங்கிவருவதைக் கண்டு பயந்த இஸ்ரயேலருக்கு மோசே எப்படி தைரியமூட்டினார்?

அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்
இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள்
இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை
ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்
நீங்கள் அமைதியாயிருங்கள்

11. பார்வோனின் படைகள் நெருங்கி வருகையில் ஆண்டவர் மோசேயை நோக்கி சொன்னது என்ன?

முன்னோக்கி செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்
கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்து விடு
இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்
நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன்
அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்

12. இஸ்ரயேல் மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்?

மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்கவைத்து உலர்ந்த தரையாக்கினார்.
நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர்
பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.
பொழுது புலரும்முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.

13. ஆண்டவர் பார்வோன் படையை எவ்வாறு அழித்தார்?

மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது.
அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.
திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது.
அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.
இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார்.

14. "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" – இதுயார் கூற்று?

ஆண்டவர்
மோசே
ஆரோன்
பார்வோன்
இஸ்ரயேல் மக்கள்

15. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"இது உன் கையில் ------------------- உன் கண்களுக்கிடையில் ---------------------- அமையட்டும்."

அடையாளமாகவும்
ஒளியாகவும்
இருளாகவும்
அருளாகவும்
சீட்டுப்பட்டமாகவும்