1. தானியம் வாங்க தன் பிள்ளைகளை யாக்கோபு எந்த நாட்டிற்கு அனுப்பினார்?
2. தானியம் வாங்க எந்த மகனை யாக்கோபு அனுப்பவில்லை?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: "நீங்கள் -- -- -- -- -- -- -- -; பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீர்கள்".
4. யோசேப்பின் குற்றச்சாட்டுக்கு சகோதரர்கள் அளித்த விளக்கம் என்ன?
5. யோசேப்பு, பென்யமின் வரும்வரை யாரைச் சிறையில் பிடித்து வைத்துக்கொண்டார்?
6. சகோதரர்கள் யோசேப்பைக் குறித்து கூறியது என்ன?
7. சிமியோனை விடுவிக்க யோசேப்பின் நிபந்தனை என்ன?
8. யாக்கோபு ஏன் பென்யமீனை அனுப்பத் தயங்கினார்?
9. "உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்" என்று யாக்கோபு மொழிந்தவுடன் யூதா உரைத்தது என்ன?
10. "அவனுக்கு நானே பொறுப்பாளி. அவனைப்பற்றிய பொறுப்பை என் கையில் விட்டுவிடுங்கள்." இது யார் கூற்று?
11. யோசேப்புக்கு யாக்கோபு கொடுத்தனுப்பிய காணிக்கைகள் என்ன?
12. யோசேப்பு தன் சகோதரர்களின் பொருட்டு அழுத இடங்கள் எவை?
13. கோடிட்ட இடத்தை நிரப்புக: உங்களுக்கு -- -- -- -- -- -- -- -- -- -- - உண்டாகுக! அஞ்சவேண்டாம்!
14. யோசேப்பு யாருடைய கோணிப்பையில் வெள்ளிக்கோப்பையை ஒளித்துவைத்தான்?
15. பென்யமினுக்காக பரிந்து பேசியது யார்?