மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 4
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 7 முதல் 8 வரையான அதிகாரங்கள்.
முடிவுத் திகதி : 2014-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடுவோருக்கு இயேசு கூறும் வார்த்தைகள் எவை?

உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்
கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்
மற்றவர்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்துவிட வேண்டும்
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்
நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்

2. தூய்மையானவற்றையும் முத்துகளையும் எவற்றிடமிருந்து பிரித்துவைக்க வேண்டுமென்று இயேசு கூறுகின்றார்?

பாம்புகள்
நாய்கள்
சிறுவர்கள்
பன்றிகள்
நரிகள்

3. கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்ற வார்த்தைக்கு உரிய இறைவனின் பதில்கள் முறையே யாவை?

கண்டடைவீர்கள், திறக்கப்படும், அளிக்கப்படும்
குணம் பெறுவர், அமைதியடைவர், கொடுக்கப்படும்
திறக்கப்படும், கண்டடைவார்கள், கொடுக்கப்படும்
கொடுக்கப்படும், கண்டடைவீர்கள், திறக்கப்படும்
வழி பிறக்கும், திறக்கப்படும், கண்டடைவார்கள்

4. கீழே உள்ள இறைவார்த்தையை பூர்த்தி செய்யவும்.
................................................................ இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

உயிர் வாழ எதை உண்பது என்று கவலைப்படாமல் இருங்கள்
பிறர் உங்களுக்கு செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
பகைவரிடம் அன்பு கூறுங்கள்
மக்கள் பார்க்க வேண்டுமென்று அறச்செயல்கள் செய்ய வேண்டாம்.
துன்புறுத்துவோர்க்காக இறைவேண்டல் செய்யுங்கள்.

5. அழிவுக்குச் செல்லும் வாயில் எப்படிப்பட்டது?

ஆழமானது
அகன்றது
சரிவானது
விரிவானது
உயர்வானது

6. வாழ்வுக்குச் செல்லும் வாயில் எப்படிப்பட்டது?

இடுக்கமானது
ஒளிதரக்கூடியது
குறுகலானது
விலாசமானது
பள்ளமானது

7. போலி இறைவாக்கினர் எந்த உடையைப் போர்த்திக் கொண்டு நம்மிடத்தில் வருவர் என்று இயேசு கூறுகின்றார்?

ஓநாய்களின் தோலைப்
பாம்பின் தோலைப்
சிங்கத்தின் தோலைப்
முதலையின் தோலைப்
ஆட்டுத் தோலைப்

8. போலி இறைவாக்கினரின் குணங்களை இயேசு யாருக்கு ஒப்பிடுகின்றார்?

கொள்ளையிட்டுத் தின்னும் மனிதர்கள்
வீடுகளை கொள்ளையிட்டுத் தின்னும் திருடர்கள்
கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்
கொள்ளையிட்டுத் தின்னும் கழுகுகள்
கொள்ளையிட்டுத் தின்னும் நாய்கள்

9. விண்ணரசுக்குள் செல்பவர் யார்?

இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவர்.
இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவோர்.
விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவர்.
இயேசுவின் பெயரால் இறைவாக்கு உரைப்போர்.
இயேசுவின் பெயரால் வல்ல செயல்கள் பல செய்வோர்

10. . பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளி யாருக்கு ஒப்பாவர் என்று இயேசு கூறுகின்றார்?

இறைவார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படுகிறவர்கள்
வேதாகமத்தை தினமும் வாசிக்காதோர்
அன்னைமரியாவின் வார்த்தையைக் கேட்டு அவற்றின்படி செயல்படுகிறவர்கள்
இறைவாக்கினர்களின் வார்த்தையைக் கேட்டு அவற்றின்படி செயல்படுகிறவர்கள்
திருத்தந்தையின் வார்த்தையைக் கேட்டு அவற்றின்படி செயல்படுகிறவர்கள்

11. இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படாதவர்கள் யாருக்கு ஒப்பாவார்?

விண்ணுலகத்தில் தன் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்
மணல்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்
ஆற்றங்கரையில் தன் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்
சாலை ஓரத்தில் தன் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்
மலையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்

12. ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று இயேசுவிடம் சொல்லிய தொழுநோயாளரிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் எவை?

நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக
இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும்
நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்
இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை
நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.

13. முடக்குவாதமுற்றிருந்த தமது மகனுக்காக இயேசுவிடம் வந்த நூற்றுவர் தலைவர் சொன்ன வார்த்தைகள் எவை?

ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்
நான் வந்து அவனைக் குணமாக்குவேன்.
ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர்.
நான் ஒருவரிடம் ' செல்க ' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ' வருக ' என்றால் அவர் வருகிறார்.

14. கதரேனர் பகுதியில் வாழ்ந்த இருவருக்கு பிடித்திருந்த தீய ஆவிகள், இயேசுவை கண்டவுடன் என்ன வார்த்தைகளைப் பேசின?

இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை?
குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?
ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்
போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.
நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்.

15. கோடிட்ட இடத்தை நிரப்புக
நரிகளுக்குப் .........................., வானத்துப் பறவைகளுக்குக் ..................... உண்டு. மானிட மகனுக்கோ ........................... இடமில்லை?

கூடுகளும், மரங்களும், தலை சாய்க்கக்கூட
உணவும், பழங்களும், தங்குவதற்கு
பதுங்கு குழிகளும், பழங்களும், தங்குவதற்கு
பதுங்குக் குழிகளும், கூடுகளும், தலை சாய்க்கக்கூட
உணவும், கூடுகளும், தலை சாய்க்கக்கூட