மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 48
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 31, 32, 33
முடிவுத் திகதி : 2017-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யாக்கோபு ஏன் லாபானை விட்டு தப்பியோட எண்ணினார்?

லாபானின் புதல்வர், „நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான்“ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.
ஏமாற்றி, தன் கூலியைப் பத்து முறை மாற்றினார்.
ஆட்டுக்குட்டிகளை ஊதியமாக கொடுத்து யாக்கோபை ஏமாற்ற எண்ணினார். ஆனால் கடவுள் காப்பாற்றினார்.
தன் புதல்விகள் லேயாவுக்கும், ராகேலுக்கும் உரிய பங்கையும், உரிமைச் சொத்தையும் லாபான் தரவில்லை.
லாபான் யாக்கோபை அன்பு செய்தார்.

2. யாக்கோபு கானான் நாட்டிலிருந்த தம் தந்தை ஈசாக்கை நோக்கி பயணமானபோது தன்னோடு எதைக்கொண்டு சென்றார்?

மகிழுந்து
மனைவியர்
தம் மக்கள்
பதான் அராமில் ஈட்டிய செல்வம்
கால்நடை மந்தை

3. "நான் உன்னோடு இருப்பேன்" – இது யார் கூற்று?

ராகேல்
யாக்கோபு
லாபான்
ஆண்டவர்
ஈசாக்கு

4. தப்பியோடிய யாக்கோபை எதிர்நோக்கி வந்து, லாபான் கூறியது என்ன?

நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப்போல் இட்டுச் செல்லலாமா?
எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு, ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்?
நான் மேளதாள வாத்தியங்களுடன் மகிழ்ச்சியாய் உங்களை வழியனுப்பி வைத்திருப்பேனே!
என் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் நான் முத்தமிட விடாமல் செய்துவிட்டது ஏன்?
ஆனால் என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?

5. குலதெய்வச் சிலையை திருடியது யார்?

யாக்கோபு
ராகேல்
லேயா
லாபான்
ஈசாக்கு

6. "மிஸ்பா" என்றால் என்ன?

ஆண்டவர் நம்மை கண்காணிப்பாராக
கற்குவியல்
ஆண்டவர் நீதி வழங்குவாராக
கடவுளே சாட்சி
என் இறைவன்

7. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பி, அக்குவியல் அருகே உணவருந்தினர். அதற்கு லாபான், -- -- -- -- -- -- -- -- - என்றும் யாக்கோபு -- -- -- -- -- -- என்றும் பெயரிட்டனர்."

மிஸ்பா
எகர்சகதுத்தா
யெகோவா
கலயேது
எல்ஷடாய்


8. "மகனயிம்" என்றால் என்ன?

கடவுளின் பிள்ளைகள்
கடவுளின் ஆற்றல்
கடவுளின் படை
எல்ரோயி
ஏலோஹிம்

9. ஏசாவிடமிருந்து காக்கப்பட யாக்கோபு எவ்வாறு கடவுளிடம் வேண்டினார்?

என் மூதாதை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமான ஆண்டவரே! நீர் என்னை நோக்கி, „உன் சொந்த நாட்டிற்கும் உன் உறவினரிடமும் திரும்பிப்போ; நான் உனக்கு நன்மையே புரிவேன்“ என்று உரைத்தீர்
அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன்.
நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே. இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.
என் சகோதரர் ஏசாவுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.
அவர் கையினின்று என்னை விடுவித்தருளும்.

10. தன்னை காத்துகொள்ள யாக்கோபு எதை அன்பளிப்பாக ஏசாவுக்கு அனுப்பினான்?

இருநூறு வெள்ளாடுகள், இருபது வெள்ளாட்டுக் கிடாய்கள்
இருநூறு செம்மறியாடுகள், இருபது செம்மறிக் கிடாய்கள்
முப்பது பெண் ஒட்டகங்கள், அவற்றின் குட்டிகள்
இருநூறு பசுக்கள், இருநூறு காளைகள்,
இருபது பெண் கழுதைகள், பத்து ஆண் கழுதைகள்

11. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, -- -- -- -- -- -- -- -- - எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்."

யாக்கோபு
ஆண்டவர்
பெத்லகேம்
இஸ்ரயேல்
ஈசாக்கு

12. "பெனியேல்" என்றால் என்ன?

இறைவனின் முகம்
ஆண்டவர் நீதி வழங்குவார்
இஸ்ரயேல்
யாக்கோபு
நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்

13. யாக்கோபு-ஏசா சந்திப்பின்போது நடந்தது என்ன?

ஏசா யாக்கோபுக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார்.
இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்
யாக்கோபின் வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் ஏசாவை அணுகி அவரை வணங்கினர்.
ராகேலும், லேயாவும் பிள்ளைகளும் ஏசாவை வணங்கினர்
யாக்கோபும் ஏசாவும் சண்டையிட்டுகொண்டனர்.

14. அன்பளிப்பை மறுத்த ஏசாவுக்கு யாக்கோபு பார்த்து கூறியது என்ன?

இல்லை. உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மையானால் நான் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்.
உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது
ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியுள்ளீர்.
எனவே, உமக்கு அடியேன் கொண்டு வந்துள்ள அன்பளிப்பைத் தயவு செய்து ஏற்றுக்கொள்ளும்.
ஏனெனில், கடவுளின் கருணையினால் எனக்கு வேண்டிய மட்டும் உள்ளது

15. „சுக்கோத்து“ என்றால் என்ன?

ஏசா
குடில்
யாக்கோபு
லேயா
ராகேல்