1. சோதோமை விட்டு வெளியேறும் முன் லோத்துக்கு ஆண்டவர் தூதர்கள் கூறியது என்ன?
2. லோத்து தப்பித்து ஓடி அடைந்த நகர் எது?
3. ஆண்டவர் எந்த நகரின் மீது கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்?
4. சோதோம் நகர் அழிவை திரும்பிப்பார்த்ததால் உப்புத்தூணாக மாறியவர் யார்?
5. லோத்தின் புதல்வியர் பெற்றெடுத்த பிள்ளைகள் யாவர்?
6. ஏன் சாராவை சகோதரி என்று சொன்னீர் என்ற அபிமெலக்கு மன்னனுக்கு ஆபிரகாமின் மறுமொழி என்ன?
7. ஆபிரகாம், சாராவின் மகன் யார்?
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு. ஏனெனில் அவன் ஓர் -- -- -- -- -- -- -- -.
9. கோடிட்ட இடத்தை நிரப்புக: “இதோ உன் சகோதரருக்கு -- -- -- -- -- -- -- -- -- -- - கொடுத்துள்ளான். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும்.”
10. ஈசாக்கு பிறந்தவுடன் சாரா மகிழ்ச்சியுடன் சொன்னது என்ன?
11. சாரா ஏன் ஆகாரை வீட்டை விட்டு துரத்த எண்ணினாள்?
12. வேதனையடைந்த ஆபிரகாமுக்கு கடவுள் கூறியது என்ன?
13. ஆகார் எந்த பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்?
14. ஆண்டவரின் தூதர் ஆகாரிடம் கூறியது என்ன?
15. கடவுள் ஆகாருக்குச் செய்த நன்மை என்ன?