மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 42
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 13, 14, 15
முடிவுத் திகதி : 2017-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஏன் ஆபிரகாமும் லோத்தும் பிரிந்தனர்?

ஆபிரகாமும் லோத்தும் சண்டையிட்டுக்கொண்டனர்.
அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை
அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
ஆபிரகாமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
லோத்துக்கு ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.

2. பிரிவதற்கு முன்னால் லோத்தை நோக்கி, ஆபிரகாம் கூறியது என்ன?

எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம்.
ஏனெனில் நாம் உறவினர்.
நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா?
என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன். நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்.

3. லோத்து பிரிந்தபின் ஆண்டவர் ஆபிராமை நோக்கி கூறியது என்ன?

நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.
ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன்.
உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன்.
ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம்.
நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்துபார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்.

4. லோத்தைப் பிரிந்தபின் ஆபிராம் எங்கே வாழ்ந்தார்?

யோர்தான்
சோதோம்
எபிரோனிலிருந்த மம்ரே
கானான்
கொமோரா

5. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக -- -- -- -- -- -- -- - பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்".

சித்திம்
சோதோம்
கொமோரா
எபிரோன்
மம்ரே

6. லோத்து எங்கே வாழ்ந்தார்?

கொமோரா
சோதோம்
மம்ரே
எபிரோன்
யோர்தான்

7. ஆபிராம் லோத்தை எப்படி மீட்டார்?

ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக்கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.
அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர்.
தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.
அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.
தன் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்.


8. மெல்கிசெதேக் யார்?

சாலேம் அரசர்
அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார்.
ஆபிராம் கெதர்லகோமரை வீழ்த்தியபின், நேரில் சென்று அவரை வாழ்த்தியவர்
அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.
சோதோம் அரசர்

9. ஆபிராம் சோதோம் அரசனிடம் கூறியது என்ன?

விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்.
உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி.
நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன் என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக்கொள்ளமாட்டேன்.
இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம்.
ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும்.

10. மெல்கிசெதேக்கு ஆபிராமை எப்படி வாழ்த்தினார்?

விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்.
விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!
அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.
உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!
உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன்.

11. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„ஆபிராம்! -- -- -- -- -- -- நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்.“

உண்ணாதே
உறங்காதே
அஞ்சாதே
நிற்காதே
அமராதே

12. ஆபிராம் கடவுளிடம் வைத்த வேண்டுகோள் என்ன?

என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்?
எனக்கோ குழந்தையே இல்லை!
தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்.
நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்.
ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும்.

13. கடவுள் ஆபிராமுக்கு தந்த வாக்குறுதி என்ன?

இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான்.
ஆனால் உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்.
வானத்தை நிமிர்ந்து பார்.
முடியுமானால், விண்மீன் களை எண்ணிப்பார்.
இவற்றைப்போலவே உன் வழிமரபினரும் இருப்பர்.

14. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- - ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்."

கேனியர், கெனிசியர்
கத்மோனியர், இத்தியர்
பெரிசியர், இரபாவியர், எமொரியர்
கானானியர், கிர்காசியர்
எபூசியர்

15. ஆபிரகாமின் வழிமரபினர் எத்தனை ஆண்டுகள் அடிமைகளாக இருப்பர் என்று கடவுள் முன்னுரைக்கிறார்?

200 ஆண்டுகள்
300 ஆண்டுகள்
400 ஆண்டுகள்
500 ஆண்டுகள்
600 ஆண்டுகள்