மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 41
வேதாகமப் பகுதி : தொடக்க நூல் 11, 12
முடிவுத் திகதி : 2017-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“அப்பொழுது உலகம் முழுவதிலும் -- -- -- -- -- -- - -- -- -- -- -- -- -- -- இருந்தன.”

ஒரே உணவும்
ஒரே மொழியும்
ஒரே விதமான ஓசையும்
ஒரே விதமான சொற்களும்
ஒரே உலகமும்

2. சினயார் நாட்டில் சமவெளி ஒன்றில் குடியேறியபின் மக்கள் செய்தது என்ன?

செங்கற்கள் அறுத்து நன்றாகச் சுட்டனர்
செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்
உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றைக் கட்டி எழுப்பினர்.
தங்கள் பெயரை நிலைநாட்டுவோம் என்றனர்
கடவுளுக்கு சிலை எழுப்பினர்.

3. வானளாவிய கோபுரம் கட்டுவதைக் கண்ட ஆண்டவர் கூறியது என்ன?

இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர்
அவர்கள் எல்லாரும் ஒரே மொழி பேசுகின்றனர்
அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது
அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித் தடுத்து நிறுத்த முடியாது
நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்

4. வானளாவிய கோபுரம் கட்டி தங்கள் பெருமையை நிலைநாட்ட விரும்பிய மக்களை ஆண்டவர் என்ன செய்தார்?

அவர்களை ஆசீர்வதித்தார்
அவர்களை பல்கிப் பெருகச் செய்தார்.
அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார்
ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார்
ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்தார்

5. தெராகின் புதல்வர்கள் யாவர்?

சேம்
ஆபிராம்
நாகோர்
ஆரான்
காம்

6. சேமின் வழிமரபினர் யாவர்?

அர்பகசாது
செலாகு
ஏபேர்
பெலேகு
இரயு

7. ஆபிராமின் மனைவி யார்?

மில்கா
இசுக்கா
சாராய்
ஏவாள்
லோத்து

8. ஆரானின் பிள்ளைகள் யாவர்?

சாராய்
ஏவாள்
மில்கா
இசுக்கா
லோத்து

9. நாகோரின் மனைவி யார்?

இசுக்கா
மில்கா
சாராய்
ஏவாள்
லோத்து

10. ஆபிராம் பிறந்த ஊர் எது?

காரான்
ஊர்
மோரே
பெத்தேல்
பெத்லகேம்

11. ஆண்டவர் ஆபிராமுக்கு வழங்கிய ஆசி யாது?

உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்
உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன்.
உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்
உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்
உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு -- -- -- -- -- -- -- - நாட்டிற்குச் சென்றார்.

பெத்லகேம்
இஸ்ராயேல்
எகிப்து
கல்தேயா
ஊர்

13. ஆபிராமை எகிப்தியர் எவ்வாறு வரவேற்றனர்?

பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர்.
பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்.
ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும், ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.
பார்வோன் ஆபிராமைக் சிறையில் அடைத்தான்

14. ஆண்டவரின் கோபத்தைக் கண்டு பார்வோன் ஆபிராமை நோக்கி கூறியது என்ன?

நீ எனக்கு இப்படிச் செய்துவிட்டாயே!
அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?
அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்?
அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேன்
இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு

15. எதற்காக ஆபிராம் தன் மனைவி சாராயை சகோதரி என்று பார்வோனிடம் சொன்னார்?

சாராய் கண்ணுக்கு அழகாய் இருந்தாள்
ஆபிராமுக்கு வயதாகி விட்டதால்
ஆபிராம் வேறு நாட்டினர் என்பதால்
அதன் பொருட்டு ஆபிராமுக்கு நல்லது நடக்க
அதனால் ஆபிராமின் உயிர் காப்பாற்றப்பட