மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 36
வேதாகமப் பகுதி : பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்
முடிவுத் திகதி : 2016-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள் ..............., ............... இருக்கமுடியாது.

நண்பர்களாகவும்
சொந்தங்களாகவும்
சோம்பேறிகளாகவும்
உழைப்பவர்களாகவும்
பயனற்றவர்களாகவும்

2. „என் அன்பார்ந்த மைந்தர் இவரே.“ –இவ்வசனம் இடம்பெற்றுள்ள பகுதி எது?

மத்தேயு 17:5
மாற்கு 9:7
2 பேதுரு 1:17
லூக்கா 9:35
யோவான் 6:7

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„நம் ஆண்டவரின் பொறுமையை -- -- -- -- -- - எனக் கருதுங்கள்.“

கோபம்
அமைதி
மீட்பு
உணவு
வழி

4. இறைவாக்கு – சிறுவிளக்கம் தருக.

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு.
அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல.
அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.
மறைநூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல
கடவுளால் எழுதப்பட்டது

5. ஆண்டவரின் நீதி எத்தகையது?

பாவம் செய்த வானதூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை.
நீதியைப் பற்றி அறிவித்து வந்த நோவா உள்பட எட்டுப் பேரைக் காப்பாற்றினார்.
இறைப்பற்றில்லாத உலகின்மீது அவர் வெள்ளப் பெருக்கை வருவித்தார்.
சோதோம், கொமோரா என்னும் நகரங்களையும் தண்டித்தார்.
கட்டுப்பாடற்றுக் காம வெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்திய நேர்மையான லோத்தை விடுவித்தார்.

6. பிலயாம் – சிறுவிளக்கம் தருக?

இவர் ஓர் இறைவாக்கினர், பெயோரின் மகன்.
இவர் எண்ணிக்கை புத்தகம் 22-ல் இடம்பெற்றுள்ளார்
கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பினார்
அவர் தம் ஒழுங்கு மீறிய செயலுக்காக்க் கடிந்து கொள்ளப்பட்டார்
பேச இயலாத கழுதை மனித முறையில் பேசி அவரின் மதிகெட்ட செயலைத் தடுத்தது.

7. இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்தும் மீண்டும் தீயவழியில் செல்பவர்கள் பற்றி பேதுரு என்ன கூறுகிறார்?

அவர்களுடைய பின்னைய நிலை முன்னைய நிலையைவிடக் கேடுள்ளதாயிருக்கும்
அவர்கள் நீதிநெறியை அறிந்தபின் தங்களுக்கு அருளப்பட்ட தூய கட்டளையைக் கடைப்பிடியாமல் விட்டு விலகுவதைவிட, அதை அறியாமலே இருந்திருந்தால், நலமாயிருக்கும்.
“நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பி வரும்“ என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும்
அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
“பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும்“ என்பதும் ஒரு நீதிமொழி


8. ஆண்டவரின் வருகை எப்படியிருக்கும்?

ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும்
வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்
பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்
மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும்
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும்

9. போலி இறைவாக்கினர்கள் பற்றி பேதுரு கூறுவது என்ன?

அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்
தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்
விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள்
அவர்களால் உண்மை நெறி பழிப்புக்குள்ளாகும்
பேராசை கொண்ட அவர்கள் கட்டுக் கதைகளைச் சொல்லி உங்கள் பணத்தைச் சுரண்டுவர்

10. ஆண்டவரின் வருகை விவிலியத்தில் எங்கே இடம்பெற்றுள்ளது?

2 பேதுரு 3:10-13
மத்தேயு 24:43-44
லூக்கா 12:39-40
1 தெச 5:2
திருவெளிப்பாடு 16:15

11. „புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும்“ – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

2 பேதுரு 3:13
எசாயா 65:17
எசாயா 66:22
திருவெளிப்பாடு 21:1
யோவான் 19:10

12. போலிப் போதகர்கள் எப்படிப்பட்டவர்களாக பேதுரு சித்தரிக்கிறார்?

துணிச்சலுள்ளவர்கள்
அகந்தையுள்ளவர்கள்
மேன்மை பொருந்தியவர்களை பழித்துரைக்க அஞ்சாதவர்கள்
நல்லவர்கள்
பொறுமையுள்ளவர்கள்

13. கிறிஸ்துவால் அழைக்கப்பட்ட நமக்கு இருக்க வேண்டிய பண்புகள் யாவை?

நம்பிக்கையோடு நற்பண்பு
நற்பண்போடு அறிவு
அறிவோடு தன்னடக்கம்
தன்னடக்கத்தோடு மன உறுதி
இறைப்பற்றோடு சகோதர நேயம்

14. கோடிட்ட இடத்தை நிரப்புக:

இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான ............................... எழுதுவது.

தீவிரவாதியான சீமோன்
சீமோன் பேதுரு
யாக்கோபு
இயேசு
தோமா

15. ஆண்டவரின் வருகையின் பொருட்டு நீங்கள் செய்யவேண்டியது என்ன?

தூய இறைவாக்கினர்கள் முன்னுரைத்த வாக்குகளையும் ஆண்டவரும் மீட்பருமானவர் உங்கள் திருத்தூதர் மூலமாகத் தந்த கட்டளையையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்
இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்
நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள்
கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள்.
நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும், அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள்.