1. “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது “என்று கூறியவர் யார்?
2. திருமுழுக்கு யோவான் உடுத்திய உடை எது?
3. “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது ஆண்டவருக்கா வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று கூறிய இறைவாக்கினர்?
4. திருமுழுக்கு யோவான் உண்ட உணவு யாது?
5. மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவானிடம் என்ன பெற்றார்கள்?
6. திருமுழுக்கு யோவான் பரிசேயர் சதுசேயர்களிடம் கூறிய வார்த்தைகளை குறிப்பிடவும்?
7. திருமுழுக்கு யோவான் எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர் என்று யாரைப்பற்றி குறிப்பிடகின்றார்?
8. நான் தண்ணிரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன் எனக்கு(திருமுழுக்கு யோவான்) பின் வருபவர் எதனால் திருமுழுக்கு கொடுப்பார்?
9. இப்பொழுது விட்டுவிடும், கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை என்று சொல்லியவர்
10. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறியபோது என்ன இடம் பெற்றது?
11. இயேசு பாலைவனத்தில் எத்தனை நாட்கள் நோன்பிருந்தார்,
12. இயேசு பாலைவனத்தில், அலகையால் சோதிக்கப்பட்ட போது அலகை சொன்ன வார்த்தைகள் எவை?
13. அலகை அவரை விட்டு அகன்றபின் யார் வந்து இயேசுவிக்கு பணிவிடை செய்தனர்?
14. கலிலேயக் கடற்கரையில் வலைவீசிக் கொண்டிருந்த போதும், வலைகளைப் பழுது பார்த்து கொண்டிருந்தபோதும் இயேசு சீடர்கள்களாக அழைத்தவர்கள் யாவர்
15. கீறிட்ட இடத்தில் வரவேண்டிய வார்த்தைகள் எவை? இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை .................... .................... ஆக்குவேன் ' என்றார்.