மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 29
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 9, 10
முடிவுத் திகதி : 2016-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" இதற்கு இயேசுவின் பதில் என்ன?

இவர் செய்த பாவம்
இவர் பெற்றோர் செய்த பாவம்
கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.
இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல
ஜென்மப்பாவம்

2. பார்வையற்றவர் எங்கே குணம்பெற்றார்?

யாக்கோபு குளத்தில்
யோர்தான் நதியில்
கலிலேயா கடலில்
சிலோவாம் குளத்தில்
செங்கடலில்

3. "எப்படி பார்வை பெற்றாய்?" என்ற பரிசேயர்களின் கேள்விக்கு பார்வையற்றவராய் இருந்தவரின் பதில் என்ன?

பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?
இயேசு என் கண்களில் சேறு பூசினார்
பின் நான் கண்களைக் கழுவினேன்.
இப்போது என்னால் பார்க்க முடிகிறது
அவர் ஓர் இறைவாக்கினர்

4. "அவனிடமே கேளுங்கள். அவன் வயதுவந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்." இது யார் கூற்று?

பார்வையற்றவர்
பார்வையற்றிருந்தவரின் பெற்றோர்
பரிசேயர்
யூதர்கள்
இயேசு

5. 'சிலோவாம்' என்பதன் பொருள் என்ன?

அனுப்பப்பட்டவர்
குளம்
ஆறு
நீர்
ஒளி

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் -- -- -- -- -- -- -- -- "

நீதியரசர்
திருடர்
ஆயர்
கடவுள்
சீடர்

7. இயேசுவின் பிரபலமான சொற்றொடர் எது?

நல்ல ஆயன் நானே
நானே உலகின் ஒளி
ஆடுகளுக்கு வாயில் நானே
தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்
வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்


8. "எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்" என்ற இயேசுவின் கேள்விக்கு யூதர்களின் பதில் என்ன?

நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்.
ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்
உலகின் ஒளி நானே
நானே வாயில்
நானே நல்ல ஆயன்

9. பரிசேயர்கள் பார்வையற்றிருந்தவரிடம் தொடுத்த கேள்விக்கணைகள் என்ன?

பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?
உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?
அவன் உனக்கு என்ன செய்தான்?
எப்படிப் பார்வை அளித்தான்?
நானே உலகின் ஒளி

10. "நாங்கள் மோசேயின் சீடர்கள்" இது யார் கூற்று?

பரிசேயர்கள்
பார்வையற்றவர்
பேதுரு
இயேசுவின் சீடர்கள்
யோவான்

11. இயேசு யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு சென்றபோது நடந்தது என்ன?

அவ்விடத்திற்கு சென்று அங்கு தங்கினார்.
பலர் இயேசுவிடம் வந்தனர்
அவர்கள், 'யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று' எனப் பேசிக்கொண்டனர்.
இயேசு திருமுழுக்குப் பெற்றார்.
பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

12. இயேசுவின் பெயர்கள் என்ன?

உலகின் ஒளி
வாயில்
ஆயன்
மெசியா
இறைமகன்

13. ஆயரைப் பற்றிய விவிலிய பகுதிகள் எது?

யோவான் 10:7-16
எரேமியா 23:1-3
செக்கரியா 11:4-17
எசேக்கியேல் 34:11-15
திருப்பாடல்கள் 23:1-3

14. எவ்வாறு யூதர்கள் இயேசுவைப் பழித்தனர்?

நல்ல ஆயன்
அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது
பித்துப் பிடித்து அலைகிறான்
ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?
ஆடுகளுக்கு வாயில்

15. இயேசு தன் தந்தையோடு கொண்ட உறவை எவ்வாறு விளக்குகிறார்?

என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர்
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்
என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்
என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன்
தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்