மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 21
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 21, 22, 23
முடிவுத் திகதி : 2015-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. "நற்செய்தி அறிவிப்பவரான பிலிப்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தங்கினோம்" - பவுல் இங்கு குறிப்பிடும் பிலிப்பு என்பவர் யார்?

திருத்தொண்டர் எழுவருள் ஒருவர்
இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவர்
அவருக்கு திருமணமாகா நான்கு பெண்மக்கள் இருந்தனர்
இவர் நற்செய்தி அறிவிப்பவர்
இவரின் பிள்ளைகளும் இறைவாக்குரைத்து வந்தார்கள்

2. பவுலை எருசலேமிற்கு போகவேண்டாம் என எச்சரித்தவர்கள் யாவர்?

பிலிப்பு
அகபு
செசரியாவிலிருந்த சீடர்கள்
தீர் நகரிலிருந்த சீடர்கள்
மினாசோ

3. பவுல் தன்னைப்பற்றி உரையில் கூறியது என்ன?

நான் ஒரு யூதன்
சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்
எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்
கமாலியேலிடம் திருச்சட்டங்களில் நுட்பமாக பயிற்சி பெற்றவன்
கிறிஸ்தவ நெறியை சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன்

4. எருசலேமில் யூதர்களிடமிருந்து தப்பிக்க பவுலுக்கு வழங்கப்பட்ட அறிவுரை என்ன?

விருத்தசேதனம் செய்யுங்கள்
பொருத்தனை செய்து கொண்ட நான்கு பேரோடு சென்று தூய்மை சடங்கை செய்து கொள்ளுங்கள்
அவர்கள் முடி வெட்டுவதற்கான செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்
இதனால் நீர் திருச்சட்டத்தை கடைப்பிடித்து நடப்பவர் என்று தெரிந்துகொள்வார்கள்
எங்கள் வீட்டில் தங்குங்கள்

5. பவுலுக்கு எதிராக யூதர்கள் எழுப்பிய குற்றச்சாட்டு என்ன?

விருத்தசேதனம் செய்ய தேவையில்லை என்றார்
திருச்சட்டத்திற்கு எதிராக கற்பித்தார்
கிரேக்கரை கோவிலுக்குள் கூட்டி வந்து தூய்மையான இடத்தை தீட்டுப்படுத்தியுள்ளான்
கிறிஸ்தவர்களை சாகும்வரை துன்புறுத்தினான்
விருத்தசேதனம் செய்து கொள்ளுங்கள் என்றார்

6. பவுல் எருசலேமில் எந்த மொழியில் உரையாற்றினார்?

கிரேக்கம்
இலத்தீன்
அராமேயம்
ஆங்கிலம்
எபிரேயம்

7. அனனியா - சிறுகுறிப்பு வரைக

திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்
அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்
சவுலை பார்வையடையச் செய்தவர்
தமஸ்கு நகரில் வாழ்ந்தவர்
பவுலை ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு சாட்சியாய் இருக்க வேண்டியவர்


8. ஸ்தேவான் கொலைக்கு உடன்பட்டவர் யார்?

பேதுரு
மரியா
பவுல்
பிலிப்பு
மத்தேயு

9. பவுல் உரையாற்றிய பின் யூத மக்களின் எதிர்வினை என்ன?

இவனை அடியோடு ஒழியுங்கள் என்றார்கள்
தங்கள் மேலுடைகளை வீசி எறிந்தார்கள்
புழுதி வாரி இறைத்தார்கள்
இவன் வாழத் தகுதியற்றவன் என்று கத்தினர்
அனைவரும் மனமகிழ்வோடு பவுலை ஏற்றனர்

10. பரிசேயர்கள் என்போர் யார் ?

இறந்தோர் உயிர்த்தெழமாட்டார்கள் என்று நம்புபவர்கள்
அவர்கள் யூதர்கள் அல்ல
இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று நம்புவோர்
பவுலும் ஓர் பரிசேயரே
வானதூதர்கள் இல்லை என்று கூறி வந்தனர்

11. "நாங்கள் பவுலை கொல்லும்வரை உண்ணவோ குடிக்கவோ மாட்டோம்" – இச்சூளுரை எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து

12. கோடிட்ட இடத்தை நிரப்புக
"நான் ஒரு --------------------------------."

சதுசேயர்
பரிசேயன்
எபிரேயன்
யூதன்
புறவினத்தான்

13. பவுலை தண்டிக்க ஆயிரத்தவர் தலைவர் ஏன் தயங்கினார்?

பவுல் ஓர் யூதன் என்பதால்
பவுல் ஓர் பரிசேயன் என்பதால்
பவுல் ஓர் கிறிஸ்தவன் என்பதால்
பவுல் ஓர் திருச்சட்டம் பயின்றுள்ளதால்
பவுல் உரோமைக் குடிமகன் என்பதால்

14. ஆயிரத்தவர் தலைவரின் பெயர் என்ன?

பெலிக்சு
அனனியா
கிலவுதியு லீசியா
சவுல்
யோவான்

15. உயிர்த்த ஆண்டவரை பார்த்தவுடன் பவுலுக்கு நேர்ந்தது என்ன?

ஒளியின் மிகுதியால் அவரால் பார்க்க முடியவில்லை
அவர் கொல்லப்பட்டார்
அவரோடு இருந்தவர்கள் அவரை தமஸ்கு நகருக்கு அழைத்து சென்றார்கள்
குதிரையில் ஏறி தமஸ்கு நகருக்கு தானே சென்றார்
சுற்றியிருந்தவர்கள் அவரை அடித்தனர்