மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 19
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 15,16,17
முடிவுத் திகதி : 2015-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது என்று கூறுவோர் யார்?

பவுல், பர்னபா மற்றும் பேதுரு
யூதேயாவிலிருந்து வந்த சிலர்
திருத்தூதர்கள்
மூப்பர்கள்
ஆண்டவரிடம் நம்பிக்கைக்கொண்ட பரிசேயக் கட்சியினர்

2. 'மனமாறிய பிற இனத்தினர் விருத்தசேதனம் செய்தால்தான் மீட்பு பெற முடியும்' என்றவர்களுக்கு பேதுரு அளித்த பதில் என்ன?

நம்பிக்கையால் கடவுள் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார்.
ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள்
சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?
கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.
இறைவாக்கினரின் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன

3. எருசலேம் சங்கத்தின் தீர்மானத்தை எல்லா இடங்களுக்கும் எடுத்துரைக்க தேர்ந்தெடுக்கப்பட்டோர் யார்?

பேதுரு
யாக்கோபு
சீலா
யோவான்
யூதா

4. எருசலேம் சங்கத்தின் தீர்மானத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள் எங்கே எடுத்துச்சென்றனர்?

அந்தியோக்கியா
எருசலேம்
சிரியா
சமாரியா
சிலிசியா

5. இரண்டாம் தூதரைப் பயணத்தில் பவுல் யாரை துணைக்கு அழைத்துக்கொண்டார் ?

பர்னபா
மாற்கு
யோவான்
சீலா
பேதுரு

6. இரண்டாம் தூதரைப் பயணத்தில் பர்னபா யாரை துணைக்கு அழைத்துக்கொண்டார்?

பர்னபா
மாற்கு எனப்படும் யோவான்
திருமுழுக்கு யோவான்
பேதுரு
சீலா

7. தீமோத்தேயு - சிறு குறிப்பு வரைக

இவர் லிஸ்திராவில் வாழ்ந்தவர்
இவர் தாய் ஓர் யூதப் பெண்
இவர் தந்தை ஓர் கிரேக்கர்
இக்கோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர்.
பவுலின் இரண்டாம் தூதரைப் பயணத்தில் உதவினார்


8. யார் இந்த லீதியா?

தியத்திரா நகரைச் சேர்ந்த பெண்.
செந்நிற ஆடைகளை விற்பவர்
அவரும் அவர் வீட்டாரும் பவுலிடம் திருமுழுக்கு பெற்றனர்.
பவுலை வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இவர் ஓர் கிரேக்கர்

9. பிலிப்பி நகரில் பவுலுக்கும் சீலாவுக்கும் நடந்ததென்ன?

கலகம் விளைவிக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டனர்
சந்தைவெளிக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள்
மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள்
மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடித்தனர்.
அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளினர்

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:
--------------------------------------------------------- நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.

திருச்சபையின் மேல்
ஆண்டவராகிய இயேசுவின் மேல்
பவுலின் மேல்
சாத்தானின் மேல்
மாதாவின் மேல்

11. "தலைமை நடுவர்கள் உங்களை விடுதலை செய்யுமாறு சொல்லியனுப்பியுள்ளார்கள். எனவே இப்போது நீங்கள் அமைதியுடன் புறப்பட்டுப் போங்கள்" - இதற்கு பவுலின் பதில் என்ன?

நாங்கள் உரோமைக் குடிமக்கள்
முறையான தீர்ப்பு இன்றியே அவர்கள் எங்களைப் பொதுமக்கள் முன் நையப் புடைத்துச் சிறையில் தள்ளினார்கள்
இப்போது எங்களை யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப் பார்க்கிறார்களா?
அது நடக்காது
அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துச் செல்லட்டும்.

12. ஏதென்சு நகரில் பவுலின் உரைக்குப்பின் மனமாறியோர் யார்?

தியோனிசியு
தாமரி
பர்னபா
பர்சபா
சீலா

13. பவுல் மற்றும் சீலாவின் பொருட்டு, தெசலோனிக்க யூதர்களால் யாசோன் எவ்வாறு தாக்கப்பட்டான்?

யாசோனைக் கொன்றனர்
யாசோனை சிலுவையில் அறைந்தனர்
யாசோன் வீட்டை தாக்கினர்
யாசோனையும் அவரோடு சில சகோதரர்களையும் நகராட்சி மன்றத்தினரிடம் இழுத்து வந்தனர்
சீசருடைய சட்டங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று குற்றம் சுமத்தினர்

14. அரயோபாகு மன்றத்தில் பவுல் ஆற்றிய உரை என்ன?

ஏதென்சு நகர மக்களே! நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்
"அறியாத தெய்வத்துக்கு" என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன்.
நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம் 5. ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார்
நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 4. இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்
ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார்

15. ஏதென்சு நகரில் பவுல் யாரோடு ஒவ்வொரு நாளும் விவாதித்து உரையாடினார்?

எப்பிக்கூரர்
ஸ்தோயிக்கர்
தொழுகைக் கூடத்தில் கடவுளை வழிபடுவோரோடு
சந்தைவெளிகளில் சந்தித்த மக்களோடு
தொழுகைக் கூடத்தில் யூதர்களோடு