1. நிலத்தை விற்று ஒரு பகுதியை தனக்கென்று வைத்துக்கொண்டு மறு பகுதியை மட்டும் திருத்தூதர்களின் காலடியில் வைத்த அனனியாவிடம் பேதுரு கேட்டது என்ன?
2. பொய் சொன்னதால் உயிர்விட்டவர் யாவர்?
3. ஏன் திருத்தூதர்கள் கைது செய்யப்பட்டார்கள்?
4. "இந்த மனிதருடைய இரத்தப்பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே" என்ற தலைமைக்குருவின் கேள்விக்கு திருத்தூதர்களின் மறுமொழி என்ன?
5. திருத்தூதர்களைக் கொல்ல திட்டமிட்ட தலைமைச்சங்கத்தாரிடம் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் சொன்னது என்ன?
6. திருத்தூதர்களை தலைமைச் சங்கத்தார் என்ன செய்தார்கள்?
7. பந்தியில் கிரேக்க மொழி பேசுவோருக்கும் எபிரேய மொழி பேசுவோருக்கும் நடந்த முறுமுறுப்பில் திருத்தூதர்களின் அறிவுரை என்ன?
8. பணிவிடை செய்ய திருத்தூதர்கள் நியமித்த எழுவர் யாவர்?
9. ஸ்தேவானுக்கு எதிரான குற்றச்சாட்டு என்ன?
10. கமாலியேல் சொல்லும் பொய் இறைவாக்கினர் யாவர்?
11. கிரேக்க மொழி பேசுவோர் எபிரேய மொழியினருக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டு என்ன?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: அவை -------------------------------------- சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்கமுடியாது
13. கோடிட்ட இடத்தை நிரப்புக: ஸ்தேவான் ----------------------------- ------------------------------------- எதிராகப் பழிசொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்
14. ஸ்தேவானுக்கு எதிராக வாதாடியோர் யாவர்?
15. காவலில் இருந்த திருத்தூதர்களை விடுவித்தவர் யார்?