மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 13
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 1, 2
முடிவுத் திகதி : 2015-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. உயிர்த்தப்பின் இயேசு எத்தனை நாள்களாக திருத்தூதர்களுக்கு தோன்றி அவர்களுக்கு கற்பித்தார்?

50 நாள்கள்
40 நாள்கள்
30 நாள்கள்
20 நாள்கள்
10 நாள்கள்

2. உயிர்த்த ஆண்டவர் திருத்தூதர்களுக்கு கற்பித்தவை என்ன?

என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் உலகின் கடையெல்லைவரை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்
நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம்
என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள்
நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்

3. "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்?" இது யார் கூற்று?

இயேசு
திருத்தூதர் பேதுரு
பவுல்
வெண்ணாடை அணிந்த இருவர்
தெயோவில்

4. யூதாஸ் பெற்ற நேர்மையற்ற கூலியைக்கொண்டு என்ன வாங்கப்பட்டது?

சிறு வீடு
அக்கலிதமா
கோயில்
உடை
இரத்த நிலம்

5. யூதாசுக்கு பதிலாக திருத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

யோசேப்பு
பர்சபா
யுஸ்து
யூதா
மத்தியா

6. "பெந்தகோஸ்து" என்றால் என்ன?

தூய ஆவியானவர் வருகைதந்த நாள்
நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள்
அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத்திருவிழா
பிறசபை கிறித்தவர்கள்
ஐம்பதாம் நாள்

7. தூய ஆவியானவர் எந்த வடிவில் திருத்தூதர்கள்மேல் வந்து அமர்ந்தார்?

புறா வடிவில்
வெண்ணிற ஆடை வடிவில்
கதிரவன் வடிவில்
நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவில்
புகைப்படலம்

8. திருத்தூதர்கள் தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டவுடன் அங்கு நிகழ்ந்தது என்ன?

திருத்தூதர்கள் பேசுவதை கிரேக்கரும், அரேபியரும் புரிந்துகொண்டனர்
திருத்தூதர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர்
திருத்தூதர்கள் பேசுவதைக் கேட்டு எல்லோரும் மலைத்துப்போயினர்
இந்திய, இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களும் புரிந்துகொண்டனர்
அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினர்

9. ஒரே இறைவாக்குகளை உள்ளடக்கியவை யாவை?

திருத்தூதர் பணிகள் 2: 17-21
யோவேல் 2: 28-32
திருப்பாடல் 16: 8-11
திருத்தூதர் பணிகள் 2: 25-28
திருத்தூதர் பணிகள் 2: 7-11

10. பேதுரு தனது அருளுரையில் மேற்கோளிட்ட இருவர் யாவர்?

மத்தியா
யோவேல்
பவுல்
தாவீது
கிரேக்கர்

11. "நீங்கள் _________________________ மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்"

யூதர்கள்
ரோமானியர்கள்
திருச்சட்டம் அறிந்தோர்
பரிசேயர்கள்
திருச்சட்டம் அறியாதோர்

12. "உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் ______________ பெறுங்கள்"

ஆசீர்
உதவி
திருமுழுக்கு
தூய ஆவி
அனைத்தையும்

13. திருமுழுக்கு பெற்றோர் எதில் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்?

இறைவேண்டலில்
புதுமை செய்வதில்
அப்பம் பிடுவதில்
திருத்தூதர் கற்பித்தவற்றில்
நட்புறவில்

14. நம்பிக்கைக்கொண்டோரின் வாழ்க்கைமுறை எப்படியிருந்தது?

ஒன்றாயிருந்தனர்
உடைமைகளை பகிர்ந்தளித்தனர்
ஒவ்வொரு நாளும் ஒரே மனத்தோடு கோவிலில் கூடுவர்
பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் உணவை பகிர்ந்து உண்டு வந்தனர்
அவர்கள் யாரிடமும் பேசவில்லை

15. "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்ற மக்களின் கேள்விக்கு பேதுருவின் பதில் என்ன?

மனம் மாறுங்கள்
நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்
வீடுதோறும் சென்று அப்பத்தை பகிருங்கள்
தூய ஆவியை கொடையாக பெறுவீர்கள்
இயேசுகிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெறுங்கள்