மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 100
வேதாகமப் பகுதி : நீதித்தலைவர் 3:1- 30
முடிவுத் திகதி : 2022-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இஸ்ராயேல் மக்கள் யார் நடுவில் வாழ்ந்தனர்?

கானானியர்
இத்தியர்
எமோரியர்
பெரிசியர்
இவ்வியர்

2. ஆண்டவரின் பார்வையில் இஸ்ரேலியர் செய்த தவறு என்ன?

தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தனர்
பாகாலுக்கு ஊழியம் செய்தனர்
அசேராக்களுக்கு ஊழியம் செய்தனர்
விண்மீன்களுக்கு ஊழியம் செய்தனர்
ஆண்டவரின் பார்வையில் தீயது என பட்டதைச் செய்தனர்

3. இஸ்ரேலியர் ஆண்டவரை நோக்கி கூக்குரல் இட்டபோது ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார் அவர் யார்?

காலேபின் இளைய சகோதரர்
கெனாசின் மகன்
ஒத்னியேல்
பாகால்
பெரிசியர்

4. கூசான் ரித்சாயிமை வெற்றி கொள்வதற்கு காரணமாய் அமைந்தது எது?

பாலுக்கு ஊழியம் செய்தமை
ஒத்னியேல் மீது ஆண்டவரின் ஆவி இருந்தமை
அசேராக்களுக்கு ஊழியம் செய்தமை
இஸ்ரயேலர் கூசானுக்கு எட்டு ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்தமை
வேற்று தெய்வங்களுக்கு ஊழியம் செய்தமை

5. ஆண்டவர் மோவாபின் மன்னன் எக்லோனை வலிமைப்படுத்கியதன் காரணம் என்ன?

ஒத்னியேல் இறந்தது
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயது எனப்பட்டதைச் செய்தது
அவர்கள் கூசான் ரித்சாயிமை மதிப்பளித்தது
வலிமை உள்ளவனாக இருந்தமை
அவர்கள் அசேராக்களுக்கு ஊழியம் செய்தது

6. எக்லோனுக்கு இஸ்ராயேல் மக்கள் எத்தனை ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்தனர்?

எட்டு ஆண்டுகள்
பத்து ஆண்டுகள்
முப்பது ஆண்டுகள்
பதினெட்டு ஆண்டுகள்
பதினான்கு ஆண்டுகள்

7. விவிலியத்தில் நீதித்தலைவர்கள் பகுதியில் காட்டப்படும் இடக்கை மனிதரின் பெயர் என்ன?

கேரா
எக்லோன்
பென்ஜமின்
ஏகூது
ஒத்னியேல்

8. எக்லொனுக்குக் கப்பம் கட்டுமாறு அனுப்பிவைக்கப்பட்ட மனிதர் யார்?

மோவாபு
ஒத்னியேல்
பென்ஜமின்
இடக்கை மனிதர்
ஏகூது

9. மன்னன் எக்லோன் ”அமைதி” எனக் கூறக் காரணம் என்ன?

மன்னனை சுற்றி நின்றவர்கள் வெளியே செல்வதற்காக
சிலை வணக்கம் செய்வதற்காக
ஏகூதுகூறும் ரகசிய செய்தியை அறிவதற்காக
குளிர்ந்த அறையில் அமைதியாக இருப்பதற்காக
கழிவறைக்கு சென்று வருவதற்காக

10. எக்லோன் மன்னனின் மேல் அறையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன காரணம் என்ன?

வேலையாட்கள் பூட்டிவிட்டனர்
மன்னன் கதவை தாளிட்டுக் கொண்டான்
ஏகூது கதவுகளைப் பூட்டி விட்டார்
கதவுகள் பூட்டப்படவில்லை
கதவுக்கருகில் சாளரம் இருந்ததால்

11. எக்லோன் மன்னனின் வேலையாட்கள் சாவியை எடுத்து கதவைத் திறந்தார்கள் ஏன்?

அவர்கள் மன்னன் கதவைத் திறப்பார் என எண்ணி ஏமாற்றம் அடைந்ததால்
மேல் அறையின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தாலும் அவை திறக்கப்படாமல் இருந்ததாலும்
ஏகூது தனது காரியத்தை முடித்துவிட்டு சென்றுவிட்டதால்
மன்னன் தூங்கிக் கொண்டிருந்ததால்
மன்னன் வேலை ஆட்களை வருமாறு அழைத்ததால்

12. எக்லோன் மன்னன் தரையில் விழுந்து கிடந்தான் நடைபெற்றது என்ன?

ஏகூது மன்னனைக் கொலை செய்தான்
மன்னனை வயிற்றில் குத்தினான்
ஏகூதின் வாள் வயிற்றைக்குத்தி மறுபுறம் வெளியே வந்தது
மன்னன் செபித்துக் கொண்டிருந்தான்
ஏகூது கடவுளின் செய்தி இருப்பதாக கூறி மன்னனை கொன்றான்

13. ஏகூது தப்பியோடிய இடத்திற்குப் பெயர் என்ன?

எப்ராயீம் மலை
பாகாலின் கோவில்
கில்கான்
செயிரா
எம்மோன்

14. இஸ்ராயேல் மக்கள் மலை நாட்டிலிருந்து ஏன் கீழே இறங்கினர்?

மோவாபியருள் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதால்
மன்னன் எக்லோன் அழைத்ததால்
ஏகூத் எப்ராயீம் மலையில் எக்காளம் ஊதியயதால்
மோவாபு இஸ்ரேயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டதால்
ஜோர்தானின் கடவுதுறைகள் கைப்பற்றப்பட்டதால்

15. ”என் பின்னால் வாருங்கள் ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்” இவ்வாறு கூறியது யார்?

மோவாபு
ஏகூது
ஒத்னியேல்
மன்னன் எக்லொன்
கெனாசின்