மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 136
வேதாகமப் பகுதி : 1சாமுவேல் 10: 16 – 1சாமுவேல் 11:8
முடிவுத் திகதி : 2025-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)
திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.



1. சாமுவேல் மக்களிடம் என்ன செயல்பாட்டினை செய்தார்?

மிஸ்பாவில்ஆண்டவர் திருமுன் அழைத்தார்
இஸ்ராயேலரின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார் என அவர்களுக்கு சொன்னார்
நான் இஸ்ரயேலை எகிப்தில் நின்று கொண்டு வந்தேன்
எகிப்தின் கையில் நின்று உங்களை விடுவித்தேன்
உங்களை துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளில் என்றும் உங்களை விடுவித்தேன்

2. சாமுவேல் ஆண்டவர் கூறியதாக மேலும் என்ன கூறினார்?

நீங்கள் துன்ப துயரங்களின் உங்களுக்கு மீட்பராக இருந்த கடவுளைப் புறக்கணித்தீர்கள்
எங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்தும் என்று கேட்டீர்கள்
எனவே உங்கள் குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்
உங்கள் பேருந்துகளை வரிசையாக நிறுத்துங்கள்
உங்கள் தேர் சக்கரங்களின் அச்சை கழட்டி விடுங்கள்

3. சாமுவேல் மிஸ்பாவுக்கு ஆண்டவர் திருமுன் மக்களை அழைத்த பின்னர் என்ன நிகழ்ந்தது?

அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வந்தார்
அங்கே அவர் சீட்டு போட்டார்
சீட்டு பெஞ்சமின் குலத்தின் மீது விழுந்தது
பெஞ்சமின் குலத்தை அதன் குடும்ப வாரியாக ஒருங்கே கொண்டு வந்தார்
கீசின் மகன் சவுலின் மீதும் சீட்டு விழுந்தது

4. சவுலை அங்கே தேடிய போது என்ன நிகழ்ந்தது?

சவுலை அங்கே காணவில்லை
சவுல் இங்கே வந்து விட்டானா? என வினவினார்கள்
ஆண்டவர் ஆம் என பதிலளித்தார்
அவன் பொருட் குவியல்களுக்கு இடையே ஒளிந்துள்ளான் என்று பதில் கூறினார்
சவுல் வைக்கோல் குவியலில் வைக்கோல்களை அடுக்கிக் கொண்டிருந்தார்

5. சவுலை மக்கள் என்ன செய்தார்கள்? சவுல் எவ்வாறு இருந்தார்.

மக்கள் அவரை பிடித்துக்கொண்டு வந்தார்கள்
மக்கள் நடுவே அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார்
மக்கள் அனைவரும் அவரது தோளுயரமே இருந்தார்கள்
சவுல் மிகவும் குள்ளமான மனிதராக இருந்தார்
அவரது கால் கட்டையாக இருந்தது

6. சாமுவேல் மக்களுக்கு என்ன கூறினார்?

ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரை பாருங்கள்
மக்கள் அனைவரிலும் அவரைப் போல் வேறு ஒருவர் உண்டோ?
அப்போது மக்கள் அனைவரும் ஆதரித்தனர்
மக்கள் அரசர் நீடுழி வாழ்க என ஆர்ப்பரித்தனர்.
மக்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக நின்றனர்

7. மக்கள் சவுலை ஏற்றுக்கொண்டபோது என்ன நிகழ்ந்தது?

சாமுவேல் அரசின் சட்ட திட்டங்களை எடுத்துரைத்தார்
சாமுவேல் அரசின் சட்ட திட்டங்களை ஓர் ஏட்டில் எழுதினார்
சாமுவேல் அரசின் சட்ட திட்டங்களை எழுதி ஆண்டவர் திருமுன் வைத்தார்
அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்
சவுலும் கிபியாவில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார்.


8. எல்லோரும் சவுலை ஏற்றுக் கொண்டார்களா?

தீயோர் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை
இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும் எனக்கூறினார்கள்
அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை
சவுலுக்கு அன்பளிப்பு எதுவும் அளிக்காத போதும் அவர் அமைதியாக இருந்தார்
சவுலை வாழால் வெட்டிக் கொல்லத் தீர்மானித்தார்கள்

9. அக்காலத்தில் அம்மோனியர் யார்? அவர்கள் என்ன செய்தார்கள்?

அம்மோனியன் யாபேசை முற்றுகையிட்டான்
அந்த அம்மோனியனின் பெயர் நாகாசு என்பதாகும்
அம்மோனியர் கோலியாத்தை போல் உயரம் உள்ளவராக இருந்தார்
அந்த யாபேசு கிலயாதில் உள்ளது
அம்மோனியனிடம் எருது படை இருந்தது

10. நாகாசுவுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே இடம் பெற்ற உடன்படிக்கையும் உரையாடலும் என்ன?

இஸ்ரயேலரின் வலது கண் பிடுங்கப்படும்
இஸ்ரயேலர் அனைவரும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்
யாபேசின் பெரியோர்கள் நாகாசுவுடன் உரையாடினார்கள்
ஏழு நாட்கள் தவணை கேட்டார்கள்
ஏழு விளக்கு தண்டுகள் கொளுத்தி நாகசுவின் முன் வைத்தார்கள்


11. யாபேசின் பெரியோர் மேலும் என்ன பேசினார்கள்?

எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம்
எங்களை மீட்பார் எவரும் இல்லையென்றால் என்ன செய்வது என யோசித்தார்கள்
எங்களை மீட்பார் எவரும் இல்லையென்றால் நாங்கள் சரணடைவோம் எனக் கூறினார்கள்
நாகசுவுக்கு மல்லிகை பூ மாலை இடுவோம் எனச் சொன்னார்கள்
இரண்டு கழுதைகளை பரிசளிப்போம் எனச் சொன்னார்கள்


12. இஸ்ரயேலின் தூதர்கள் கிபயாவுக்கு வந்து என்ன சொன்னார்கள்?

அவர்கள் நாகசுடன் பேசிய செய்தியை சொன்னார்கள்
மக்கள் அனைவரும் குரல் எழுப்பி அழுதனர்
நாகாசு இஸ்ரயேலர்களின் வலது கண்களைப் பிடுங்க விருப்பதைச் சொன்னார்கள்
அனைவரும் அவமானத்துக்கு உட்பட இருப்பதையும் சொன்னார்கள்
தாங்கள் நாகசுவுக்கு மல்லிகை பூ மாலை போட விருப்பதைச் சொன்னார்கள்


13. இஸ்ரயேல் தூதர்கள் சொன்ன செய்தி கேட்டு மக்கள் அழுகை கேட்ட சவுல் என்ன செய்தார்?

மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்
மக்களுக்கு என்ன நேரிட்டது? ஏன் அழுகிறீர்கள்? எனக் கேட்டார்
யாபேசின் ஆட்கள் சொன்னதை சவுல் கேட்டார்
அப்போது கடவுளின் ஆவி அவரை வல்லமையுடன் ஆட்கொண்டது
அவர் மஞ்சள் பூசி குளித்து அமைதியாய் இருந்தார்


14. கடவுளின் ஆவி சவுலை ஆட்கொண்டபோது என்ன நிகழ்ந்தது ?

அவரது சினம் கனன்றது.
ஒரு சோடி மாடுகளைப் பிடித்துத் துண்டு துண்டாக வெட்டி அவற்றை தூதர்கள் மூலமாக இஸ்ரயேல் முழுவதும் அனுப்பினார்
சவுலின் முன்னும் சாமுவேலின் பின்னும் வராதவர்களின் மாடுகள் இவ்வாறு கொல்லப்பட நேரிடும் என்று சொல்லி அனுப்பினார்
அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் அவர்களை ஆட்கொண்டது
மக்கள் ஒன்று திரண்டு வந்தார்கள்


15. அவர் மக்களை கணக்கெடுத்ததும் கொடுத்த செய்தியும் என்ன?

பெசேக்கில் இஸ்ராயில் மக்கள் 3 லட்சம் பேர்
யூதாவில் இஸ்ராயேல் மக்கள் 30,000 பேர்
வந்திருந்த தூதர்கள் நாளை வெயில் ஏறு முன் மீட்புக் கிடைக்கும் என்று சொன்னார்கள்
வந்திருந்த தூதர்கள் மூலம் கிலயாதிலுள்ள யாபேசின் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது
யாபேசின் ஆட்கள் நாளை உம்மிடம் சரணடைவோம் உமது விருப்பப்படியே செய்யும் என்று சொன்னார்கள்


நீங்கள் கீழே குறிப்பிடும் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்

First Name:
Last Name:
E-mail:
Address :

City Code :
City :
Country: