மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 133
வேதாகமப் பகுதி : 1சாமுவேல் 7:13 முதல் 1சாமுவேல் 9:1
முடிவுத் திகதி : 2024-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)
திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.



1. சாமுவேலின் வாழ்நாளில் ஆண்டவர் கரம் எங்கே இருந்தது?

சாமுவேலுடன் இருந்தது
பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.
எபினேசர் இடம் இருந்தது
மோசையிட இருந்தது
பெலிஸ்தியரிடம் இருந்தது

2. எக்ரோன் முதல் காத்து வரை பெலிஸ்தியர்களினால் கைப்பற்றி இருந்த நகர்களுக்கு என்ன நிகழ்ந்தது?

பெலிஸ்தியர்களால் கைப்பற்றி இருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன
பெலிஸ்தியர் கைகளில் இருந்து இஸ்ரயேலர் தங்கள் எல்லை பகுதியை மீட்டுக்கொண்டனர்
பெலிஸ்திய நகர்கள் மோசேயினால் மீண்டும் கைப்பற்றப்பட்டது
எபினேசர் என்ற சிலையை பெலிஸ்தியர் வணங்கினர்
பெலிஸ்தியர்களும் எமோரியர்களும் எபினேசர் என்றும் கல்லினை தங்களுக்குள் பங்கிட்டு கொண்டார்கள்

3. சாமுவேலின் நிலை என்ன?

சாமுவேல் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலருக்கு தலைவராக இருந்தார்
அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்தார்
அவர் பெத்தேல், கில்கால், மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் மக்களுக்கு நீதி வழங்கினார்
அவரது வீடு இராமாவில் இருந்தது
அவர் இராமாவுக்கு திரும்பி அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்

4. சாமுவேலுக்கு வயது முதிர்ந்த நிலையில் என்ன நிகழ்ந்தது?

அவர் தம் புதல்வர்களை இஸ்ரவேலரின் நீதி தலைவராக அமர்த்தினார்
அவரது தலை மகனின் பெயர் யோவேல்
அவரது இளைய மகனின் பெயர் அபியா
இவர்கள் பெயேர்செபாவில் நீதி தலைவர்களாக இருந்தனர்
இவர்கள்பெலிஸ்தியருடன் சண்டையிட்டனர்

5. சாமுவேலினது வயது முதிர்ந்த நிலையில் அவர்களது புதல்வர்களின் நிலை எவ்வாறு இருந்தது?

அவர்கள் சாமுவேலின் வழிமுறையில் நடக்கவில்லை
அவர்கள் பொருள் ஆசைக்கு உட்பட்டனர்
அவர்கள் கையூட்டு வாங்கினர்
அவர்கள் நீதியை வழங்கவில்லை
அவர்கள் யானை மீது சவாரி செய்தனர்

6. சாமுவேல் வயது முதிர்ந்ததனாலும் அவர்களது புதல்வர்கள் நேர்மையாக நடவாததநாலும் என்ன நிகழ்ந்தது?

தலைவர்கள் ஒன்று கூடி சாமுவேரிடம் வந்தார்கள்
அவர்கள் இராமாவில் ஒன்று கூடினார்கள்
அவர்கள் தங்களுக்கென ஒரு குதிரை படையை அமைத்தார்கள்
அவர்கள் தங்களுக்கென ஒரு காலாட் படையையும் அமைத்தார்கள்
அவர்கள் பெலிஸ்தியருடன் போருக்குப் புறப்பட்டனர்

7. இஸ்ரேயேலரின் தலைவர்கள் சாமுவேரிடம் என்ன கூறினர்?

உமக்கு வயது முதிர்ந்து விட்டது எனக் கூறினர்
வேற்று நபர்களுக்கு அரசர் இருப்பதை சுட்டிக்காட்டினர்
தங்களுக்கு ஓர் அரசன் வேண்டும் எனக் கேட்டனர்
நீதி வழங்க ஓர் அரசனை நியமிக்க வேண்டும் எனக் கேட்டனர்
ஒரு போர் படை வேண்டும் என கேட்டுக் கொண்டனர்


8. சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டும் எனக் கேட்ட போது என்ன நிகழ்ந்தது?

சாமுவேலுக்கு அது தீயது எனப்பட்டது
சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்
ஆண்டவர் சாமுவேலுக்கு மக்கள் குரலையும் அவர்கள் உன்னிடம் கூறுவதையும் கேள் என்று சொன்னார்
சாமுவேலை அவர்கள் புறக்கணிக்க வில்லை எனச் சொன்னார்
அவர்கள் சாமுவேல் அரசனாக வேண்டும் என கூறினர்

9. சாமுவேலிடம் ஆண்டவர் கூறியது என்ன?

நான் அவர்களை எகிப்தில் இருந்து கொண்டு வந்தேன்
அவர்கள் என்னை புறக்கணித்து விட்டார்கள்
அவர்கள் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்கிறார்கள்
அவ்வாறே அவர்கள் உனக்கும் செய்கின்றனர்
அவர்களை கண்டித்து எச்சரித்து விடு

10. ஓர் அரசன் வேண்டுமென்று கேட்ட மக்களுக்கு சாமுவேல் என்ன கூறினார்?

அரசன் உங்கள் புதல்வர்களை தன் தோரோட்டிகளாக வைத்துக் கொள்வான்
உங்கள் புதல்வர்களை குதிரை வீரர்களாக வைத்துக் கொள்வான்
அரசன் அவர்களை தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான்
அரசன் உங்கள் புதல்வியரைத் திருமணம் செய்து கொள்வான்
உங்கள் ஒலிவத்தோப்புக்களில் சிறந்தவற்றை எடுத்துக் கொள்வான்


11. சாமுவேல் அரசன்னை பற்றி கூறியது என்ன?

அரசன் அவர்களை ஆயிரத்தினர் தலைவர் ஆக்குவார்
அரசன் அவர்களை ஐம்பதிமர் தலைவராக ஆக்குவார்
அரசன் அவர்களை தன் நிலத்தை உழுபவராக ஆக்குவார்
அரசன் அவர்களை தன் விளைச்சலை அறுவடை செய்பவராக ஆக்குவார்
அரசன் அவர்களை போர்க்கருவி தேர்க்கருவி செய்பவராக நியமிப்பார்


12. சாமுவேல் அரசன் பற்றி மேலும் கூறியது என்ன?

அரசன் உங்கள் புதல்வியரை பரிமளத் தைலம், செய்பவர்களாக நியமிப்பார்
அரசன் உங்கள் புதல்வியரை சமைத்தல், அப்பம் சுடுபவர்களாக நியமிப்பார்
திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொள்வார்
உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளுவார்
உங்கள் வேலைக்காரரை சொந்த அலுவலுக்கு பயன்படுத்துவார்


13. மக்கள் சாமுவேல் குரலுக்கு செவி கொடுக்க மறுத்து என்ன கூறினார்கள்?

எங்களுக்கு கட்டாயமாய் ஓர் அரசன் வேண்டும்
அனைத்து வேற்றின மக்கள் போலவே நாமும் இருப்போம்
எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார்
எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார்
எங்களுக்கு தேநீர் போட்டு தாரும் எனக் கூறினார்கள்


14. சாமுவேல் மக்கள் கூறியவற்றை ஆண்டவரிடம் கூறியபோது ஆண்டவர் என்ன சொன்னார்?

ஆண்டவர் அவர் குரலுக்கு செவி சாய்த்தார்
அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய் எனக் கூறினார்
சாமுவேல் ஒவ்வொருவரும் உங்கள் நகருக்குச் செல்லுங்கள் கூறினார்
போய் படுத்து தூங்குங்கள்
நான் தூங்கப்போகிறேன்


15. சவுல் பற்றி கூறுங்கள்?

சவுல் கீசுவுக்கு பிறந்த மகன்
சவுலின் பேரர் செரோர் ஆவார்
செரோரின் தந்தை பெக்கோராத் ஆவார்
இவர்கள் மோசேயின் உறவினர்கள்
இவர்கள் இஸ்ரேவேலில் வாழவில்லை


நீங்கள் கீழே குறிப்பிடும் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்

First Name:
Last Name:
E-mail:
Address :

City Code :
City :
Country: