ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









மனிதருக்கு வாழ்வுதரும் அரசே!



“ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். ஆண்டவர் தம்மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம்மக்களுக்கு சமாதானம் அருள்வாராக! ஆண்டவர் தம்மக்களுக்கு ஆசி வழங்குவாராக!” (திருப்பா 29:10-11)

இறைவனின் அரசாட்சி மனித அரசாட்சி
குடிசையில் பிறப்பு
எளிய வாழ்வின் அடையாளம், மனிதனின் தேவைகள், உணர்வுகளை எளிதில் புரிந்துக் கொண்டார்.
அரண்மனைவாழ்வு
பிறருக்காக நேரமின்மை, பிறரை புரிந்து உதவுவது கடினம்.
உடையில் எளிமை
ஆடம்பரமற்ற அடிப்படைத் தேவைகளில் நிறைவு கொண்டார்.
விலையுயர்ந்தபட்டாடை
மரியாதையைத் தக்கவைத்துக்கொள்ள ஆடம்பரச்செலவுகள்.
நன்றியின் பலன் சிலுவை
மனிதனின் மீட்பு என்ற தொடர்பயண எதிர்நோக்கு
ஆட்சி அதிகாரம்
சுயநலம் மேலோங்கி சிறுமையில் இருப்போரை கண்டுக் கொள்ளாமை.
முள்முடி கிரிடம்
இறைத்திட்ட நிறைவின் பலனாய், விண்ணக வாழ்வில் கிடைக்கும் பொன்முடிகள்.
பளப்பளப்புகிரிடம்
புகழுக்காய், பதவிக்காய்பலனை எதிர்ப்பார்த்து ஏமாற்றம்.
இவ்வாறு நமது வாழ்க்கை முறையில் எவ்வகை ஆடம்பரமோகம் இருக்கிறது? நாம் கிறிஸ்துவை ப்பின்பற்றி வாழும் பண்பை கொண்டுள்ளோமா? இதை கண்டுணர்ந்திடவும், பகிர்ந்திடவும் இறையாட்சி இன்று நம்மை அழைக்கிறது.

செபம்:-
விண்ணக மண்ணக அரசசே எம் இறைவா! பதவி, புகழ் மற்றும் பட்டங்களை எமது மனம் விரைந்து தேடாமல் எம்மைத்தேடி வரும் சந்தர்ப்பங்களை உம்துணையோடு நல்வழியில் பயன்படுத்திட அருள்தாரும் இறைவா அருள்தாரும்!
[2014-12-30 06:00:00]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி