நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு 28:19)
பாவமன்னிப்பு
தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்.
(நீதிமொழிகள் 28:13)
நற்கருணை
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
(1 கொரிந்தியர் 11:26)
உறுதிப்பூசுதல்
பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
(திருத்தூதர்பணி 8:17)
குருத்துவம்
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
(லூக்கா 22:19)
திருமணம்
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
(மத்தேயு 19:6)
நோயிற்பூசுதல்
உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்.
(யாக்கோபு 5:14)
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று
ஆம் ஆண்டு
ஆம் நாள்
. இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.
முதலாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 3வது வாரம் திங்கள்கிழமை 2021-03-08
ஆண்டவரே இயேசுவே,
வியத்தகு ஆற்றல் கொண்டவரே! உம்மைத் துதிக்கின்றேன். எனக்கு வாழ்வு தருபவரே! உம்மைப் புகழ்கின்றேன். என் பாதுகாப்பும், கற்பாறையும், கோட்டையும் ஆனவரே! நன்றி கூறுகின்றேன். எலிசா நாமானைப் பார்த்து, “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்” என்று, சொன்னதையும் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியாரின் வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார் எனவும்; அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறியது என்றும், இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கும் நான், உமது ஊழியர்களுக்கு பணிந்து நடக்கவும்; அவர்கள் கற்பிப்பதில் நம்பிக்கை வைத்து, பணிந்து வாழவும் நல்மனம் தாரும். இயேசுவே! உமது வார்த்தையில் என்னோடு பேசி எனக்கு நம்பிக்கை தந்து என்னை உமது பாதையில் நடத்தும். என் பலவீனங்களால் பல பாவங்களைச் செய்து உம்மைத் துன்பப்படுத்திய நிலைகளை எண்ணி மனம் வருந்துகின்றேன். இந்தத் தவக்காலத்தில் உமது உண்மையான பிள்ளையாக வாழ கிருபை கூர்ந்து நடத்தும். அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கின்றேன்; கலங்காதே நான் உன் கடவுள் உன்னை என் வலக்கரத்தால் தாங்குவேன்” என்ற இயேசுவே! அச்சம், கவலை, ஏமாற்றங்களால் தவிக்கும் அனைவரையும் உமது வல்லமையான கரத்தால் மூடி ஆறுதல் கொடுக்க வேண்டுமாய் மன்றாடுகின்றேன். “என் அருள் உனக்குப் போதும். என் பிரசன்னம் உனக்கு முன் செல்லும்” என்ற வார்த்தை, இன்றைய நாளில் எனக்கு வழிகாட்டவும்; அதனால் இறை அன்பில் நம்பிக்கையுடன் நடக்கவும், மற்றவருக்கு உதவி செய்யவும் அருள் தரவேண்டும் என்று, அன்பின் பரிசுத்த இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்
மார்ச் 06, இச்சனிக்கிழமையன்று, இரண்டாவது பயணத் திட்ட நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டின், நஜாஃப் நகரிலிருந்து, நசிரியா நகருக்கு, ஐம்பது நிமிடங்கள் விமானப்ப பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கிருந்து 5.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, இஸ்லாம்,... [2021-03-08 01:55:12]
போரால் தங்கள் வாழ்வு பறிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கின் மோசூல் நகர் Hosh al-Bieaa மையத்தில் நடந்த செப வழிபாட்டில் இறைவனை நோக்கி எழுப்பிய இறைவேண்டலின் சுருக்கம்:
ஈராக்கிலும், மத்தியக்கிழக்கு நாடுகள் அனைத்திலும், போரில் பலியான... [2021-03-08 01:41:29]
பாக்தாத் நகரில் அமைந்துள்ள கல்தேய வழிபாட்டு முறை, புனித யோசேப்பு பேராலயத்தில், மார்ச் 6, இச்சனிக்கிழமை மாலையில், திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,
இன்றைய இறைவாக்கு, நமக்கு, ஞானம், சாட்சியம், வாக்குறுதிகள் ஆகியவற்றைப் பற்றி... [2021-03-08 01:37:47]
அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும், யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் ஆரம்பிக்கப்படும் முன்னைய காலப்பகுதிகளில் யேர்மனியில் சில நகரங்களில் தமிழ் திருப்பலிகளை நடாத்தி புலம்பெயர் தமிழ் மக்களின் ஆன்மீக தாகத்தை அன்றைய காலப்பகுதியில் தீர்த்தவருமான அருட்தந்தை
சிறந்ததொரு சமூகநலத்... [2020-08-13 22:55:56]
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின்... [2020-08-13 22:44:36]
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள மதமாற்றத் தடைச்சட்டம், இந்துக்கள் உட்பட பல்வேறு மக்களை, கிறிஸ்துவ மறையைப் பற்றி அறிவதற்குத் தூண்டுதலாக அமைந்துள்ளது என்று, போபால் உயர் மறைமாவட்டப் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.
மத உரிமைச் சட்டம்... [2021-02-25 23:02:36]
டகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநில Dibrugarh மறைமாவட்ட ஆயர் Joseph Aind அவர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் Albert Hemrom அவர்களை, மறைமாவட்ட ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1945ம் ஆண்டு பிறந்து, சலேசிய... [2021-02-16 00:51:10]
இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம்
நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம்
ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம்
பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம்
சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம்
சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]
திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம்.
இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம்.
நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம்.
படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]
கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள்,
கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும்.
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.
வாலிப வயது
2021-03-08
வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள்,
திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக
வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும்
கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின்
மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje)
என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள்.
திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு
மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும்
தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம்,
எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
2021-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! உங்களை செபத்திலும் நோன்பிலும் வாழ அழைக்குமாறு இறைவன் இன்றும் எனக்கு அனுமதி தந்துள்ளார். இரக்கம் மற்றும் நம்பிக்கைக்குச் சாட்சியமாக இருக்கும் இக்காலத்தில் வாழ்கின்றீர்கள், ஆகவே நான் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் நோன்பும் போர்முழக்கங்களையும் அடங்கச்செய்துவிடும். அன்பான பிள்ளைகளே, இந்த இரக்கத்துக்குரிய காலத்தை நம்புவதுடன், விசுவாசத்துடன் வாழுங்கள், எனது மாசற்ற இதயம் என்னில் அபயம் தேடும் உங்களில் எவரையும் கைவிட்டுவிடாது. எல்லாம் வல்ல...
2021-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
“அன்பான பிள்ளைகளே! நான் உங்களை இந்த வேளையில் செபிக்க, நோன்பிருக்க மற்றும் ஆடம்பரங்களைத் தவிர்த்துக்கொள்ள அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் மேலும் விசுவாசத்தில் உறுதியாகலாம். இதுவே விழித்துக்கொள்ள மற்றும் புதிய பிறப்பெடுப்பதற்கான தருணம். இயற்கை தானே வழங்குவது போன்று, நீங்களும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எவ்வளவற்றைப் பெற்றுள்ளீர்கள். சமாதானம் மற்றும் அன்பை காவிச்செல்பவர்களாக இருங்கள், இதன்மூலம் நீங்கள் உலகில் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். வானத்தைப் பாருங்கள், அங்கு கவலையோ அல்லது வெறுப்போ...
2020-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை அமைதி வழங்கும் இயேசு பாலனிடம் எடுத்துச் செல்கிறேன். அவரே உங்களோடு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பவர். எனது அன்பான பிள்ளைகளே, உங்களது ஆழமான விசுவாசம் அழிந்துபோக, மற்றும் சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை தளர்ந்து செல்ல அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வேளையிலும் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ஆகவேதான் நான் இயேசுவோடு இங்கு வந்துள்ளேன். இதன்மூலம் அவர் தனது அமைதியின்...
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2021-03-08
அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.(லூக்4:30)
இன்றைய சிறிய வழிச் செபம்
துணை துணையான இறைவா, இன்று துணையில்லா மக்களுக்கு நல்வழிகாட்டியாக இருக்கச் செய்யும் ஆமென்
இன்றைய துதி
2021-03-08
வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே என்று கடைபிடிக்க துணை செய்பவரே உம்மை துதிக்கிறேன்(மத்7: 14)
68.நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும் என்று நல்ல கனியாக இருப்பவரே உம்மை துதிக்கிறேன்(மத்7: 17)
ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல்
முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.
உங்கள் Email முகவரி
திருப்பலி செபப்பாடல்கள்
பயனடைந்தோர்
புனித கன்னி மரியாள்
இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)
இறைவாக்குத்தத்தம்
உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)
இறைசித்தம்
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)
திருத்தந்தை
பிரான்சிஸ்
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்தேயு 16:18)
பரிசுத்த ஆவி
நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)
பரிசுத்த ஆவி
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)
இறைவாக்குத்தத்தம்
எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்:
என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். (நீதிமொழிகள் 8:17)
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)