நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு திருவருகைக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
2023-12-09



ஆண்டவரே இயேசுவே,
அப்பா பிதாவே! அதிசயங்கள் செய்பவரே! உம்மை ஆராதிக்கின்றேன். மாண்பு மிக்கவரே! நுண்ணறிவின் ஊற்றானவரே! உம்மைத் துதிக்கின்றேன். உடைந்த உள்ளத்தைக் குணப்படுத்தி புதுவலுத்தந்து நடத்துபவரே! நன்றி கூறுகின்றேன். “உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக் கொள்ளமாட்டார்” என்று, இன்றைய இறைவார்த்தையில் அருளுகின்றீரே! உமது முகத்தின் ஒளி என்மீதும் என் குடும்பத்தின் மீதும் வீசச் செய்யும். அதனால் உமது தூய பாதையில் நடப்போமாக. இயேசுவே! உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றவரே! என் காயங்களை ஆற்றுகின்றவரே! என் பாவங்களால் வருவித்துக் கொண்ட காயங்களைப் போக்கியருளும். என் பாவங்களை உமக்கு அறிக்கையிட்டுக் கதறுகின்ற என் வேண்டுதல்களை உற்றுக் கேளும். நொருங்கிய நெஞ்சத்தினரை கண்ணோக்கும். ஆண்டவரே இயேசுவே! என்னை உருமாற்றி, புத்துயிர் தந்தருளும். இந்த நாளை உமது பரிசுத்த கல்வாரிக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். அமைதி தருபவரே! சாத்தானை வெற்றி கொள்ள பலம் தாரும். உமது வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் எனக்கு அருள்கொடை எதிலும் குறைவு இல்லாமல் இருக்கவும்; உமது அருள் என்னுடன் தங்கவும் செய்ய வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

போரால் இறக்கும் காசா குழந்தைகள்!



உலகத் தலைவர்கள் இப்போதே போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும், உடைந்த அரசியலுக்கான விலையை இன்னும் அதிகமான குழந்தைகள் செலுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் பாலஸ்தீன பகுதிக்கான Save the Children எனப்படும் உலகக் குழந்தைகள்... [2023-12-07 23:14:28]



உலகின் 40 பணக்கார நாடுகளில் வறுமையில் வாடும் குழந்தைகள்!



உலகின் 40 பணக்கார நாடுகளில் 5-இல் 1 குழந்தை வறுமையில் வாழ்கின்றது என்றும், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நார்வே, பிரித்தானிய ஐக்கிய அரசு, சுவிட்சர்லாந்து ஆகியவை 2014 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் குழந்தை வறுமையின் அதிகரிப்பை அனுபவித்துள்ளன என்றும்... [2023-12-06 22:33:15]



அரேபிய அன்னை திருத்தலத்தின் வைர விழாவைக் கொண்டாடும் குவைத்!



குவைத்தில் உள்ள கத்தோலிக்கச் சமூகம், அம்மண்ணில் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்கக் கோவிலும், Bahrain, Qatar மற்றும் Saudi Arabia ஆகிய வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய அப்போஸ்தலிக்க மறைவட்டத்தின் (Apostolic Vicariate) தாய்க்கோவிலுமான அரேபிய அன்னை ஆலயத்தின் 75-வது ஆண்டு... [2023-12-06 22:32:28]

இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!



செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் இலங்கையில் ஏற்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
இரண்டு முன்னாள் அரசுத்தலைவர்கள் உட்பட வலிமை வாய்ந்த இராஜபக்சே சகோதரர்கள் பொருளாதாரத்தை தவறாகக்... [2023-11-15 22:15:24]



ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டங்கள்



இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்றும் கூறியுள்ளார்... [2023-11-12 23:27:29]

அருள்பணியாளர்கள், துறவிகளுக்கான தேசிய கருத்தரங்கு



பெங்களூருவில் உள்ள புனித பேதுரு திருப்பீட இறையியல் கல்லூரி மற்றும் கலாச்சார கல்விக்கான ஆசிய மையம் இணைந்து டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவறத்தாருக்கான தேசிய கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்த உள்ளது.
வருகின்ற டிசம்பர் மாதம் 4... [2023-11-13 23:10:56]



வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் மூலவேருடன் தொடர்பிலிருக்க



உரோம் நகரில் வாழும் இந்தியர்கள், தங்கள் கலாச்சார மற்றும் தேசிய தனித்தன்மையை தொடர்ந்து காக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெர்ராவோ.
இத்தாலியின் தலைநகர் உரோமில் வாழும் இந்திய அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள்... [2023-11-05 00:37:59]

சந்திப்பின் காலம் - தவக்காலம்



இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG



எது திருவருகைக்கால பரிசு



திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

கிறிஸ்மஸ் பாடல்கள்


2023-12-09

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

உன்னை சாத்தான் தேடுகிறான்


2023-12-09

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.




பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2023-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! கடுமையாகச் செபிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். நவீனத்துவம் உங்கள் எண்ணங்களில் நுழைந்து செபத்தின் மகிழ்வையும் இயேசுவின் சந்திப்பையும் பறிக்க விரும்புகின்றது. ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் குடும்பங்களில் செபத்தைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். இதனால் நான் உங்களைத் தேர்ந்தெடுத்த முதல் நாட்களில், செபங்கள் இரவும் பகலும் எதிரொலித்ததுபோல, அன்னையான எனது இதயம் மகிழ்வுறும், ஆனால் வானகத்தில் அமைதியில்லை, மாறாக இரக்கத்தின் இந்த இடம் போதியளவு சமாதானத்தையும் ஆசீரையும் வழங்குகின்றது....




2023-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் நான் உங்களை இதயத்தால் செபிக்க அழைக்கிறேன். உங்கள் இதயத்தை நேசியுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் செபம் வானத்தைத் துளைத்துச் செல்லட்டும், அதன்மூலம் உங்கள் இதயம் கடவுளின் அன்பை அனுபவிக்கட்டும், அவர் உங்களைக் குணப்படுத்துவதுடன் தனது அளவிடமுடியாத அன்பால் உங்களை ஆட்கொள்வார். ஆகவேதான் நீங்கள் இதயத்தால் மனம்திரும்பும் வழிகளைக்காட்ட, நான் உங்களுடன் உள்ளேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2023-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில், எல்லாம்வல்ல இறைவன் என்னை உங்களை அன்புசெய்ய மற்றும் மனமாற்றத்திற்கான வழியில் நடத்த மற்றும் அன்பான இறைவனை இதுவரை அறியாமல் தூரத்தில் விலகி இருக்கும் அனைவருக்காக செபிக்கவும் அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கவும் உங்களிடம் அனுப்பியுள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அனைத்து அமைதியற்ற இதயங்களுக்கு, அன்பு மற்றும் சமாதானத்தின் சாட்சிகளாக இருங்கள். எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி“


திருவெளிப்பாட்டு ஆண்டு


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)