நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு 28:19)
பாவமன்னிப்பு
தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்.
(நீதிமொழிகள் 28:13)
நற்கருணை
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
(1 கொரிந்தியர் 11:26)
உறுதிப்பூசுதல்
பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
(திருத்தூதர்பணி 8:17)
குருத்துவம்
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
(லூக்கா 22:19)
திருமணம்
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
(மத்தேயு 19:6)
நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று
ஆம் ஆண்டு
ஆம் நாள்
. இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.
இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம்
20வது வாரம் செவ்வாய்க்கிழமை 2022-08-16
ஆண்டவர் இயேசுவே,
கடல் நடுவே அரியணை அமைத்து வீற்றிருக்கும் அற்புதமே! உம்மை துதிக்கின்றேன். ஞானத்தினதும் அறிவாற்றலினதும் ஊற்றானவரே! உம்மை புகழ்கின்றேன். மகிமை நிறைந்த என் வாழ்வின் விளக்கே உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.'என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்; நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்” என் இன்றைய இறைவார்த்தையில் எனக்கு உமது அன்பை வெளிப்படுத்துகின்றீர்ர்.இயேசையா! நிறைவானவை வரும் போதும்; அரை குறையானவை அழிந்து போகும் என்று கற்பித்தவரே! நிலையான,நிறைவான உம்மை முழுமனதுடனும், என் முழுஆற்றலுடனும் நீர் தந்த பரிசுத்தத்துடன் உம்மிடம் வர கிருபை தாரும். நீர் உம்முடைய நாமத்தால் எனக்கு தந்த அனைத்து இறை உறவுகளையும் நினைத்து நன்றி கூறுகின்றேன். அவர்களை உமது கரத்தில் தருகிறேன். அவர்களை முழுமையாக ஆசீர்வதியும்; ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இருளின் ஆதிக்கங்களில் உமது தெய்வீக ஒளி வீசச்செய்யும். ஆண்டவரே இயேசுவே! இன்றைய நாளில் என்னை உமது கனிகள், கொடைகள் தந்து வழி நடத்தும். உமது நாமத்தால் நான் உருவாக்கிய உறவுகள் என்னை மேலும் ஆன்மீகத்தில் வளர துணைசெய்ய என்னிடம் அனுப்பும். உமம் திருவுளத்தை நிறைவேற்றுபவர் மாத்திரம் என் நன்பர்களாக நான் அடைந்திட அருள் தர வேண்டும் என்று இயேசுவின் நாமத்தால் செபிக்கின்றேன். ஆமென்
புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! [2022-07-23]
சாவை வென்று சரித்திரம் படைத்த எம் ஆண்டவரே, இம்மனுக்குலம் மீட்படைய மனுவுருவெடுத்து மாபரனாய் மரித்து உயிர்த்தவரே!
ஆண்டுதோறும் வரும் உம் உயிர்ப்புப் பெருவிழா, உன்னத இலட்சியத்தோடு வாழத்தூண்டும் உம் உயிர்ப்பின் சக்தியை எம் உள்ளத்தில் ஊற்றட்டும்.
இன்றைய எம் உலகில் எங்கு... [2022-04-18 15:02:53]
ஏப்ரல் 14, புனித சனி இரவு, திருவிழிப்புத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லூக்கா நற்செய்தியிலிருந்து (லூக் 24 1:10) மூன்று முக்கிய கருத்துக்களை மையப்படுத்தி தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.
அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, “அவர்கள் கண்டனர்,... [2022-04-18 14:54:10]
கிறிஸ்துவை நாம் எவ்வாறு பின்பற்றி வந்துள்ளோம் என்பதை, இந்தப் புனித வாரத்தில் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 12, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரு குறுஞ்செய்திகள் வழியாக அழைப்புவிடுத்துள்ளார்.
“சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஒருவரை... [2022-04-13 10:03:07]
இலங்கைவாழ் மக்களின் உண்மையான ஏக்கங்கள் செவிமடுக்கப்படவும், மனித உரிமைகள் மற்றும், பொதுமக்களின் சுதந்திரங்கள் முழுமையாக மதிக்கப்படுவதற்கு உறுதியளிக்கப்படவும் அதற்குப் பொறுப்பான தலைவர்களுக்கு திருத்தந்தை விண்ணப்பம்
சமுதாய, மற்றும், பொருளாதாரச் சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் இலங்கைவாழ் மக்கள், தங்களின் கோரிக்கைகள் கேட்கப்படுவதற்கு... [2022-05-12 11:17:02]
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் பூதவுடல் இன்று மாலை மூன்று மணியளவில் ஊர்வலமாக செபஸ்தியார் போராலயத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.
1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம்... [2022-03-19 23:21:21]
சென்னை மாநகராட்சியின் முதல் தலித் மேயராகப் பொறுப்பேற்றுள்ள பிரியா இராஜன் அவர்களுக்கு தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதேவேளை, பெண் விடுதலையின் தற்போதைய சூழலில், சென்னை மேயராக பிரியா அவர்களின் எழுச்சி, பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்று இயேசு சபை அருள்பணியாளரும்,... [2022-03-11 01:58:10]
இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம்
நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம்
ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம்
பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம்
சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம்
சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]
திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம்.
இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம்.
நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம்.
படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]
குணமளிக்கும் வழிபாடு - யேர்மனி எசன் 2014
நெறிப்படுத்தல் அருட்பணி.ஜோசப் விக்ரர்
2022-08-16
கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள்,
கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும்.
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.
Joshua at the Battle of Jericho
2022-08-16
வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள்,
திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக
வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும்
கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின்
மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje)
என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள்.
திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு
மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும்
தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம்,
எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
2022-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! உங்கள் பெயரிலும் எனது வேண்டுகோளை ஏற்றும் நீங்கள் செய்துவரும் அனைத்து உதவிகளுக்கும் செபங்களுக்கும் நான் உங்களுடன் சேர்ந்து மகிழ்வடைகின்றேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது திட்டத்தின்படி மக்களைக் குணப்படுத்துவது மிக முக்கியமானது என்பதை மறவாதீர்கள். இறைவனிடமும் செபத்திலும் திரும்பி வாருங்கள், இதன்மூலம் தூயஆவியானவர் உங்களில் மற்றும் உங்கள் ஊடாக செயலாற்றுவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சாத்தான் போருக்கு மற்றும் வெறுப்புக்காகப் போராடும் இந்த நாட்களிலும் நான் உங்களோடு...
2022-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! நான் உங்களைப் பார்ப்பதுடன் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன், ஏனென்றால் அவர் தொடர்ந்தும் என்னை உங்களிடம் வந்து, உங்களைத் தூயவர்களாக வாழத் தூண்ட, என்னை அனுமதித்துள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சமாதானம் குழம்பியுள்ளதுடன் சாத்தான் அமைதியின்மையை விரும்புகிறது. ஆகவே உங்கள் செபங்கள் மேலும் பலமடையட்டும், அதன்மூலம் ஒவ்வொரு தீய சக்தியும் பிரிவடைந்து போரில் அழிந்து போகட்டும். சமாதானத்தைக் கட்டுவிப்பவரும் மகிழ்வை ஏற்படுத்துபவருமான உயிர்த்த கிறிஸ்து உங்களிடமும்...
2022-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! உங்களை நான் பார்க்கிறேன், அத்துடன் உங்களில் பலர் காணாமற்போயுள்ளதையும் காண்கின்றேன். ஆகவே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்: கடவுளிடம் திரும்பி வாருங்கள், செபத்திற்குத் திரும்பி வாருங்கள், தூயஆவியானவர் தனது இதயத்தில் மகிழ்வடைந்து உங்களை தனது அன்பால் நிரப்புவார். ஒரு சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் கடவுளின் திருஇருதயத்திற்கு எங்கும் சாட்சிகளாய்த் திகழுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2022-08-16
“மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும்”(மத்19:26)
இன்றைய சிறிய வழிச் செபம்
விடுதலை விடுதலையின் நாயகனே இறைவா, இன்று விடுதலை பெற துடிக்கும் மனிதர்களின் வாழ்வை உயர்த்திடும் ஆமென்
இன்றைய துதி
2022-08-16
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து முழுமை மூலம் இறைவனை அடைய செய்யும் இயேசுவே உம்மை துதிக்கிறேன் (மத் 22:37)
ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல்
முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.
உங்கள் Email முகவரி
திருப்பலி செபப்பாடல்கள்
பயனடைந்தோர்
புனித கன்னி மரியாள்
இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)
இறைவாக்குத்தத்தம்
உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)
இறைசித்தம்
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)
திருத்தந்தை
பிரான்சிஸ்
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்தேயு 16:18)
பரிசுத்த ஆவி
நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)
பரிசுத்த ஆவி
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)
இறைவாக்குத்தத்தம்
எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்:
என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். (நீதிமொழிகள் 8:17)
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)