நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 24வது வாரம் சனிக்கிழமை
2023-09-23



ஆண்டவரே இயேசுவே,
நீர் ஒருவரே வேந்தர்! நீர் ஒருவரே அரசருக்கெல்லாம் அரசர்! ஆகவே, உம்மை ஆராதிக்கின்றேன். ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரே, சாவை அறியாதவரே, அணுக முடியாத ஒளியில் வாழ்பவரே! உம்மைத் துதிக்கன்றேன். “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது." என, விதைப்பவர் உவமை வழியாக எனக்கு இன்றைய இறைசெய்தி மூலமாகக் கற்றுத்தருபவரே! கேட்கச் செவியிருந்தும், உணர மனமிருந்தும், உம் வார்த்தைகளையும் கட்டளைகளையும் நினையாமலும், கடைப்பிடிக்காமலும் இருந்த சந்தர்ப்பங்களை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். “தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.” என்ற இயேசையா! என்னைப் பாவத்தில் விழத்தூண்டும் அனைத்துக் காரண காரியங்களையும் என்னிடமிருந்து எடுத்து விடும். உமது ஞானம் நிறைந்த இதயத்தை எனக்குத் தாரும். அதனால் நன்மைகளை நான் அடையவும், பரிசுத்த பாதையில் தொடர்ந்து, உமது ஆசீராலும் அன்பாலும் சமாதானத்தாலும் நிலைத்து வாழ்வும் வரம் தாரும். இயேசுவே, இன்றைய நாளில் என்னைக் காத்து வழிநடத்தும். பகைவரின் சூழ்ச்சிக்குள் விழாமலும், தீய மாயைக்குள் சிக்கி விடாமலும் ஒளியின் பாதையில் திருசிலுவையின் பாதையில் நடந்திடவும்; நீர் எதிர்பார்க்கும் விளைச்சலை உமக்குக் காணிக்கை ஆக்கிட ஆற்றலும் அருளும் தர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

மத்தியதரைக்கடல் கூட்டத்தின் இறுதி நிகழ்வில் திருத்தந்தை



மத்தியதரைக்கடல் பகுதியில் வாழும் மக்களுக்கான கூட்டத்தில் பங்கு கொள்ள கர்தினால் Aveline அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இத்தாலியின் பாரி நகர் மற்றும் புளாரென்ஸ்க்குப்பின் தற்போது பிரான்சின் மர்செய்லில் கூடியுள்ளோம். எத்தனை துயர்கள்... [2023-09-23 21:54:50]



ஹைட்டியில் வன்முறை அதிகரித்து வருகிறது - பேராயர் மெசிதோர்



ஹைட்டி பகுதி மக்கள் தீவிர வன்முறை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு துயரமான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹைட்டி படுகுழியின் விளிம்பில் உள்ள ஒரு நாடு என்றும் கூறியுள்ளார் பேராயர் Max Leroy... [2023-09-21 22:33:41]



அமைதி தேடப்படாவிட்டால் உலகம் நெருக்கடிகளில் மூழ்கும்



உக்ரைன் மீதான இரஷ்ய தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எழுந்த ஒட்டுமொத்த உலக ஒழுங்கையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், இந்தப் போர் நிறுத்தப்படாவிட்டால், அமைதித் தேடப்படாவிட்டால், முழு உலகமும் இன்னும் ஆழமான நெருக்கடிகளில் மூழ்கும் சூழல் உள்ளது... [2023-09-21 22:32:59]

இலங்கை மலையகத் தமிழர்களின் உரிமைக்கானப் போராட்டம்!



இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் அணுகுமுறை அவமானத்துக்குரிய ஒன்றாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி Deepa Fernando
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களின் ஒரு சிறிய குழுவால்... [2023-08-20 00:24:40]



தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம்



ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான... [2023-07-18 00:20:04]

மரியன்னை மாநாட்டின் கனிகளாக விளைந்த செயல்பாடுகள்



தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் என்ற மரியன்னையின் பாடலுக்கு ஏற்ப, மரியன்னை மாநாட்டின் கனிகளாக மணிப்பூர் மக்களுக்கு உதவியையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறுதலையும், அவர்களைப் பாதுகாப்போருக்கு உற்சாகத்தையும் அளித்து வருகின்றோம் என்று கூறினார் சென்னை பெசன்ட் நகர் அன்னை... [2023-09-09 23:00:07]



மணிப்பூரில் தலையிட குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம்



மணிப்பூர் மாநிலத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கும் பிரிவினைவாத மோதல்களை முடிவுக்குக் கொணர இந்திய குடியரசுத் தலைவர் தலையிடவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளன வடகிழக்கு இந்தியாவின் கிறிஸ்தவ சபைகள்.
மணிப்பூரின் அண்டை மாநிலமான நாகாலாந்தின் 5 கிறிஸ்தவ சபைகள் இணைந்து... [2023-09-07 23:10:52]

சந்திப்பின் காலம் - தவக்காலம்



இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG



எது திருவருகைக்கால பரிசு



திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

நற்செய்தி பகிர்வும் குணமாக்கல் திருப்பலியும் - அருட்தந்தை.போல் றொபின்சன்


2023-09-23

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

Life Of Jesus Christ


2023-09-23

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.




பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2023-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் நான் உங்களை இதயத்தால் செபிக்க அழைக்கிறேன். உங்கள் இதயத்தை நேசியுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் செபம் வானத்தைத் துளைத்துச் செல்லட்டும், அதன்மூலம் உங்கள் இதயம் கடவுளின் அன்பை அனுபவிக்கட்டும், அவர் உங்களைக் குணப்படுத்துவதுடன் தனது அளவிடமுடியாத அன்பால் உங்களை ஆட்கொள்வார். ஆகவேதான் நீங்கள் இதயத்தால் மனம்திரும்பும் வழிகளைக்காட்ட, நான் உங்களுடன் உள்ளேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2023-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில், எல்லாம்வல்ல இறைவன் என்னை உங்களை அன்புசெய்ய மற்றும் மனமாற்றத்திற்கான வழியில் நடத்த மற்றும் அன்பான இறைவனை இதுவரை அறியாமல் தூரத்தில் விலகி இருக்கும் அனைவருக்காக செபிக்கவும் அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கவும் உங்களிடம் அனுப்பியுள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அனைத்து அமைதியற்ற இதயங்களுக்கு, அன்பு மற்றும் சமாதானத்தின் சாட்சிகளாக இருங்கள். எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி“




2023-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இயற்கைக்குச் சென்று செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், அனைத்திலும் உயர்ந்தவர் உங்கள் இதயங்களுடன் பேசுகிறார், ஒவ்வொருவரையும் படைத்த இறைவன் தனது அன்புக்குச் சாட்சியாக உங்களுக்கு தூயஆவியானவரின் வல்லமையை உணரச்செய்கிறார். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். எனது குரலைக் கேட்பதற்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“


திருவெளிப்பாட்டு ஆண்டு


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)