நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 8வது வாரம் வெள்ளிக்கிழமை
2023-06-02



ஆண்டவரே இயேசுவே,
வாழ்வு தருபவரே! உங்களைத் துதிக்கிறேன் அப்பா. ஞானத்தைத் தருபவரே! உங்களைப் போற்றுகிறேன் அப்பா. வார்த்தையை வழியாக்கி, நல்பாதையில் கரம்பிடித்து என்னை வழிநடத்தி வருபவரே! நன்றியோடு உங்களை ஆராதனை செய்கிறேன் அப்பா. "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? என்று, தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞரும் உங்களைப் பார்த்து கேள்வி கேட்டதை வாசிக்கிறேன் இயேசுவே. என் சுயநல தேவைகளின் போது, தலைமைக் குருக்கள்; மறைநூல் அறிஞரைப் போல், பலவேளைகளில் நானும் உங்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்டு உங்களை நோகடித்த சந்தர்ப்பங்களை நினைத்து மிகவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன் தந்தையே. நான் அறியாமல் செய்த பாவங்களை மன்னியும் அப்பா. என் உள்ளம் ஞானத்தில் நிறைய அருள் தாரும். என் காலடிகள் உங்கள் பாதையை நோக்கியதாக மாற, உங்கள் திருச்சட்டங்களைக் கடைப்பிடிக்க என்னை வழிநடத்தும் அப்பா. ஆண்டவரே இயேசுவே! என் உள்ளம் தூய்மையாக மாற இந்நாளில் என்னை அழைப்பவரே! உங்களைப் போற்றி வணங்குகிறேன் அப்பா. ஞானஸ்நானம் வழியாகப் பெற்ற தூய்மை வாழ்வை என் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ ஆசீர்வதித்து அருள்புரிய வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

திருஅவையின் வருங்காலத்திற்கு குடும்பங்களின் நலவாழ்வு



உலகம் மற்றும் திருஅவையின் வருங்காலத்திற்கு குடும்பங்களின் நலவாழ்வு இன்றியமையாதது என்பதை மனதில் கொண்டவர்களாக உலகின் அனைத்துக் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் ஆய்வு மையங்களிலும் குடும்பங்களின் மேய்ப்புப்பணி சார்ந்த ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகம் மற்றும் திருஅவையின்... [2023-05-30 22:43:53]



டிஜிட்டல் உலகம் என்ற நெடுஞ்சாலையின் மேடுபள்ளங்கள்



அனைத்தும் கணனி மயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வரும் நாம் அனைவரும் எவ்வாறு அன்புடன் கூடிய அக்கம்பக்கத்தினராக வாழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க முடியும் என்பதை விளக்கி ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடச் சமூகத் தொடர்புத் துறை.
‘முழுமையான... [2023-05-30 22:42:43]



நெருக்கடி நிலையில் ஆப்கானிஸ்தான் சிறார்



ஆப்கானிஸ்தான் முழுவதும், ஏறக்குறைய 16 இலட்சம் சிறார் பசியுடன் எழுந்து பசியுடனே படுக்கைக்குச் செல்கிறார்கள் என்றும், சுத்தமான தண்ணீர் உணவு தங்குமிடமின்றி, வீடு, தெரு, வயல்கள், சுரங்கங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யப் பழகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்... [2023-05-22 12:25:58]

படுகொலை செய்யப்பட்ட அருட்த்தந்தை கருணாரட்ணம் அடிகளார் இறப்பின் 15ம் ஆண்டு நினைவு
Video link : https://www.youtube.com/watch?v=JomROI0EtmA&list=LL5xO-Bkgd8wr7yv3rDzfa9Q&index=2



தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில்... [2023-04-22 11:18:10]



எம் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைகொள்ள முடியாது – பேராயர்



எமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் உருவாக்கிகொள்ள முடியாது போன இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியத்தையும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை மோசடி... [2023-04-22 11:16:18]

மணிப்பூர் இனக்கலவரத்தால் 45,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்



இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அச்சம், நிச்சயமற்றத்தன்மை, நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியுணர்வு இன்னும் நீடிக்கிறது என்று கூறியுள்ளார் இம்பால் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Dominic Lumon.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் ஏறக்குறைய 60 பேர்... [2023-05-22 12:31:05]



ஒடிசாவில் அன்னை மரியாவுக்குப் புதிய ஆலயம்!



இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த பயங்கரங்களின் பின்னணியில் கட்டப்பட்ட புனித மரியன்னை ஆலயம் சுகதபாடியின் உள்ளூர் இறைச்சமூகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியின் ஆதாரமாகச் செயல்படுகிறது என்று கூறினார் கட்டாக்-புவனேஸ்வர் மறைமாவட்டத்தின் முதன்மைகுரு பேரரருள்திரு பிரதோஷ் சந்திரன் நாயக்
இம்மறைமாவட்டத்தில் புனித... [2023-05-22 12:28:40]

சந்திப்பின் காலம் - தவக்காலம்



இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG



எது திருவருகைக்கால பரிசு



திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

Chaplet of Divine Mercy in Song


2023-06-02

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

Karol The man who became pope


2023-06-02

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.




பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2023-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இயற்கைக்குச் சென்று செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், அனைத்திலும் உயர்ந்தவர் உங்கள் இதயங்களுடன் பேசுகிறார், ஒவ்வொருவரையும் படைத்த இறைவன் தனது அன்புக்குச் சாட்சியாக உங்களுக்கு தூயஆவியானவரின் வல்லமையை உணரச்செய்கிறார். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். எனது குரலைக் கேட்பதற்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“




2023-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! சமாதானத்தையும், உயிர்த்த இயேசுவின் மகிழ்வையும் செபத்துக்குத் தூரமாக வாழ்பவர்களுக்கு வழங்குபவர்களாக வாழ நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன், இதன்மூலம் இயேசுவின் அன்பு அவர்களின் வாழ்வை மாற்றி அவர்களை ஒரு புதுவாழ்வுக்கும் புனிதத்திற்கும் இட்டுச்செல்லட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்!“




2023-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி “அன்பான பிள்ளைகளே! இந்தக் காலம் செபத்தின் காலமாக உங்களுக்கு அமையட்டும்”




திருவெளிப்பாட்டு ஆண்டு


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)