நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு 28:19)
பாவமன்னிப்பு
தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்.
(நீதிமொழிகள் 28:13)
நற்கருணை
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
(1 கொரிந்தியர் 11:26)
உறுதிப்பூசுதல்
பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
(திருத்தூதர்பணி 8:17)
குருத்துவம்
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
(லூக்கா 22:19)
திருமணம்
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
(மத்தேயு 19:6)
நோயிற்பூசுதல்
உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்.
(யாக்கோபு 5:14)
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று
ஆம் ஆண்டு
ஆம் நாள்
. இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.
முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்காக் காலம் 1வது வாரம் சனிக்கிழமை 2021-04-10
ஆண்டவரே இயேசுவே,
நானே ஆண்டவர் எனக்காகக் காத்து இருப்பவர் வெட்க்கப்படுவதில்லை என்றவரே! உம்மை ஆராதிக்கின்றேன். ஆறுதல் தருபவரே! உம்மைத் துதிக்கின்றேன். உமது மாறாத அன்பால் என்னை அரவணைத்து வழிநடத்தும் தயவிற்காக நன்றி கூறுகின்றேன். “அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்று, இன்றைய இறைவார்த்தை மூலமாக வாசிக்கும் நானும்; உமது நாமத்தால் அடைந்த நன்மைகளை, ஆசீர்வாதங்களை, மன மாற்றங்களை சபைதனில் எடுத்துரைக்கும் சாட்சியாக உமது சீடனாக மாற அருள் தந்து நடத்தும். இயேசுவே! “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்ற உமது அழைத்தலை என் வாழ்வில் கொண்டு வாழ அருள் தாரும். உம்மை என் வாழ்வில் பெருமை பாராட்டவும்; ஊழியத்தின் புனிதத் தன்மையை உணர்ந்து பரிசுத்தமான நிலையில் உமக்கு ஊழியம் செய்திடவும் அருள் தாரும். என்னை ஆன்மீகப் பாதையில் அழைத்து வந்த அனைத்து அருட்தந்தையர்களையும், சகோதர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். அவர்கள் பணிவாழ்வில் வரும் பிரச்சனைகள், சோதனைகளை வெற்றி கொள்ள வல்லமையை நிறைவாகப் பொழிந்தருளும். ஆண்டவரே இயேசுவே! இன்றைய நாளில் என் வாழ்வை ஆசீர்வாதங்களாலும், அற்புதங்களாலும் நிறைவாக்கும். உம் நுண்ணறிவை என்னில்ப் புகட்டி உமது ஒழுக்க முறைகளைக் கற்றுத் தர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்
றியோரின் பாதுகாப்பை மையப்படுத்தி, பன்னாட்டு கருத்தரங்கு நடைபெறுவதை அறிந்து, திருத்தந்தை தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
ஏப்ரல் 8, இவ்வியாழன் முதல், 10, இச்சனிக்கிழமை முடிய,... [2021-04-10 00:31:07]
திருநற்கருணைக்கு முன் இரவு கண்விழித்து செபிக்கும் பக்தர்களில் தானும் ஒருவன் என்ற நினைவை மீண்டும் தூண்டிவிட்ட இஸ்பானிய இதழுக்கு நன்றி கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதிய ஒரு குறிப்பை, இவ்விதழுக்கு அனுப்பிவைத்தார்.
1950களில், திருநற்கருணைக்கு முன்... [2021-04-08 23:50:34]
மால்ட்டா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Dionysius Mintoff அவர்கள், அண்மையில், தன் 90வது வயதை நிறைவு செய்துள்ளதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தி ஒன்றை, அவருக்கு அனுப்பியுள்ளார்.
மால்ட்டா நாட்டில் தஞ்சம்... [2021-04-08 23:44:37]
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் பூதவுடல் இன்று மாலை மூன்று மணியளவில் ஊர்வலமாக செபஸ்தியார் போராலயத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டகையின் பூதவுடல், இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக... [2021-04-03 12:45:21]
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய “இறைவா உமக்கே புகழ்” எனப்படும் Laudato si’ திருமடல், உலகப் போக்கால் இழுத்துச் செல்லப்படும் இவ்வுலகை நெறிப்படுத்தும் ஆன்மீகக் கருவியாக உள்ளது என்று, இந்திய அருள்சகோதரி ஒருவர் கூறியுள்ளார்.
உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கத்தில் (GCCM)... [2021-04-08 23:56:57]
உலகெங்கும் கிறிஸ்தவர்கள், மார்ச் 28, இஞ்ஞாயிறன்று புனித வாரத்தைத் துவக்கியுள்ளனர். ஆண்டவரின் பாடுகள் குருத்தோலை ஞாயிறன்று தொடங்கியுள்ள இப்புனித வாரம், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவோடு நிறைவடைகின்றது. இந்த புனித வாரம், இயேசுவின் பாஸ்கா பேருண்மையைச் சிந்தித்து தியானித்து, நம் வாழ்வு... [2021-03-31 00:17:00]
இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம்
நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம்
ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம்
பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம்
சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம்
சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]
திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம்.
இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம்.
நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம்.
படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]
கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள்,
கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும்.
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.
பச்சைமரப்பாடுகள்
2021-04-10
வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள்,
திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக
வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும்
கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின்
மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje)
என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள்.
திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு
மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும்
தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம்,
எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
2021-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களோடு இருந்து உங்களுக்குக் கூறுகின்றேன்: எனது அன்பார்ந்த பிள்ளைகளே, யார் செபிக்கின்றார்களோ, அவர்கள் தமது எதிர்காலம் குறித்து பயப்படுவதில்லை என்பதுடன், அவர்கள் நம்பிக்கையை இழந்து விடமாட்டார்கள். நீங்கள் மகிழ்வையும் சமாதானத்தையும் எடுத்துச் செல்பவர்களாக அழைக்கப்பட்டுள்ளீர்கள், ஏனென்றால் நீங்கள் என்னுடையவர்கள். நான் சமாதானத்தின் இராக்கினி என்ற பெயரில் இங்கு வந்துள்ளேன், ஏனென்றால் சாத்தான் குழப்பங்களையும் போர்களையும் விரும்புகிறது, அது உங்கள் எதிர்காலம் குறித்து பயத்தை ஏற்படுத்த...
2021-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! உங்களை செபத்திலும் நோன்பிலும் வாழ அழைக்குமாறு இறைவன் இன்றும் எனக்கு அனுமதி தந்துள்ளார். இரக்கம் மற்றும் நம்பிக்கைக்குச் சாட்சியமாக இருக்கும் இக்காலத்தில் வாழ்கின்றீர்கள், ஆகவே நான் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் நோன்பும் போர்முழக்கங்களையும் அடங்கச்செய்துவிடும். அன்பான பிள்ளைகளே, இந்த இரக்கத்துக்குரிய காலத்தை நம்புவதுடன், விசுவாசத்துடன் வாழுங்கள், எனது மாசற்ற இதயம் என்னில் அபயம் தேடும் உங்களில் எவரையும் கைவிட்டுவிடாது. எல்லாம் வல்ல...
2021-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
“அன்பான பிள்ளைகளே! நான் உங்களை இந்த வேளையில் செபிக்க, நோன்பிருக்க மற்றும் ஆடம்பரங்களைத் தவிர்த்துக்கொள்ள அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் மேலும் விசுவாசத்தில் உறுதியாகலாம். இதுவே விழித்துக்கொள்ள மற்றும் புதிய பிறப்பெடுப்பதற்கான தருணம். இயற்கை தானே வழங்குவது போன்று, நீங்களும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எவ்வளவற்றைப் பெற்றுள்ளீர்கள். சமாதானம் மற்றும் அன்பை காவிச்செல்பவர்களாக இருங்கள், இதன்மூலம் நீங்கள் உலகில் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். வானத்தைப் பாருங்கள், அங்கு கவலையோ அல்லது வெறுப்போ...
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2021-04-10
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்(மாற்16:15)
இன்றைய சிறிய வழிச் செபம்
துடிப்பு துடிப்புணர்வோடு செயல்பட துண்டும் இறைவா, இன்று துடிப்புடன் வாழக்கையை தடத்த துணை செய்யும் ஆமென்.
இன்றைய துதி
2021-04-10
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கனிவுடன் வாழ கற்றுத்தருபவரே உம்மை துதிக்கிறேன் (மத் 11:29)
ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல்
முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.
உங்கள் Email முகவரி
திருப்பலி செபப்பாடல்கள்
பயனடைந்தோர்
புனித கன்னி மரியாள்
இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)
இறைவாக்குத்தத்தம்
உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)
இறைசித்தம்
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)
திருத்தந்தை
பிரான்சிஸ்
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்தேயு 16:18)
பரிசுத்த ஆவி
நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)
பரிசுத்த ஆவி
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)
இறைவாக்குத்தத்தம்
எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்:
என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். (நீதிமொழிகள் 8:17)
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)