நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு 28:19)
பாவமன்னிப்பு
தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்.
(நீதிமொழிகள் 28:13)
நற்கருணை
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
(1 கொரிந்தியர் 11:26)
உறுதிப்பூசுதல்
பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
(திருத்தூதர்பணி 8:17)
குருத்துவம்
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
(லூக்கா 22:19)
திருமணம்
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
(மத்தேயு 19:6)
நோயிற்பூசுதல்
உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்.
(யாக்கோபு 5:14)
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று
ஆம் ஆண்டு
ஆம் நாள்
. இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.
முதலாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை 2021-02-25
ஆண்டவரே இயேசுவே!
கொருபின் மீது வீற்றிருக்கும் இறைவா! உம்மைத் துதிக்கின்றேன். சீயோனில் மேன்மையாக விளங்கும் தந்தையே! உம்மைத் துதிக்கின்றேன். நீதியை விரும்புபவரே!நேர்மையை நிலை நாட்டுபவரே! நன்றி கூறுகின்றேன். இதுவரை உமது அளவு கடந்த அன்பாலும் இரக்கத்தாலும் என்னைக் காத்து வந்த தயவிற்கு நன்றி கூறுகின்றேன். “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்” என, இன்றைய இறைவார்த்தையின் மூலம் எவ்வாறு இறைவனிடம் இடைவிடாது வேண்டுதல் செய்ய வேண்டும் என்று அறிவுரை தந்து கற்று தருவதற்காக நன்றி கூறுகின்றேன் இயேசுவே. நானும் நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் என் வேண்டுதல்களுக்காக மன்றாடி உம்மிடம் இருந்து ஆசீர்களையும், அருளையும் பெற்றுகொள்ளவும்; ஜெபவீரன் தானியேலைப் போல் நானும் நம்பிக்கையுடன் இறைவேண்டல் செய்யும் உறுதியான மனதையும் தாரும். என் பாவங்களுக்காக, குற்றங்களுக்காக சிலுவையில் அறையப்பட்ட என் நேச இயேசையா! உமது ஆழமான இரக்கத்தின் பேரன்பால் நான் செய்த குற்றங்களையும், பாவங்களையும் மன்னித்தருளும். என்னுடைய சுமைகள், நான் ஏற்படுத்திக் கொண்ட பழிகள் அனைத்தையும் உமது மீட்பின் திருச்சிலுவையால் அழித்து; புதிய மனிதன் ஆக்கியருளும். ஆண்டவரே இயேசுவே! “கடந்த கால நிலமைகளை மறந்து விடுங்கள். முன் நடந்த நிகழ்ச்சிகளை மறந்து விடுங்கள்” என ஆறுதல் தருபவரே! என் பழைய கசப்பான நிகழ்வுகளையும், பாவ வாழ்க்கைகளையும் அடியோடு மறந்து, விடுதலை பெற்று புதுப்பிக்கப்பட்ட மனிதனாக வாழவும்; விசுவாசத்துடன் இடைவிடாது ஜெபிக்கும் ஆற்றலையும் தரவேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்
போலந்தின் Płock நகரில், அருள்சகோதரி புனித Faustina Kowalska அவர்களுக்கு, இறைவன் காட்சியளித்ததன் 90ம் ஆண்டு நிறைவு, பிப்ரவரி 22, இத்திங்கள் கிழமையன்று நிறைவுற்றதையொட்டி, அம்மறைமாவட்ட ஆயருக்கும், விசுவாசிகளுக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
1931ம் ஆண்டு பிப்ரவரி... [2021-02-23 02:45:10]
தவக்காலத்தையும், உலக சமுதாய நீதி நாளையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 20, இச்சனிக்கிழமையன்று, தவக்காலம் (#LentenSeason), உலக சமுதாய நீதி நாள் (#WorldDayOfSocialJustice) ஆகிய இரு ‘ஹாஷ்டாக்’குகளுடன், இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
தவக்காலம் பற்றி திருத்தந்தை... [2021-02-21 01:08:55]
அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும், யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் ஆரம்பிக்கப்படும் முன்னைய காலப்பகுதிகளில் யேர்மனியில் சில நகரங்களில் தமிழ் திருப்பலிகளை நடாத்தி புலம்பெயர் தமிழ் மக்களின் ஆன்மீக தாகத்தை அன்றைய காலப்பகுதியில் தீர்த்தவருமான அருட்தந்தை
சிறந்ததொரு சமூகநலத்... [2020-08-13 22:55:56]
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின்... [2020-08-13 22:44:36]
டகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநில Dibrugarh மறைமாவட்ட ஆயர் Joseph Aind அவர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் Albert Hemrom அவர்களை, மறைமாவட்ட ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1945ம் ஆண்டு பிறந்து, சலேசிய... [2021-02-16 00:51:10]
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து விழுந்ததில் உருவான வெள்ளம், இரு மின் நிலையங்களின் பணியாளர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 10, இப்புதனன்று தன் அனுதாபங்களையும் இறைவேண்டல்களையும் தெரிவித்தார்.
திருத்தந்தையர் இல்ல நூலகத்திலிருந்து புதன் மறைக்கல்வி... [2021-02-10 22:42:40]
இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம்
நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம்
ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம்
பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம்
சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம்
சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]
திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம்.
இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம்.
நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம்.
படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்.
2021-02-25
கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள்,
கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும்.
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.
Moses - Die zehn Gebote Spielfilm
2021-02-25
வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள்,
திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக
வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும்
கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின்
மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje)
என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள்.
திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு
மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும்
தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம்,
எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
2021-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
“அன்பான பிள்ளைகளே! நான் உங்களை இந்த வேளையில் செபிக்க, நோன்பிருக்க மற்றும் ஆடம்பரங்களைத் தவிர்த்துக்கொள்ள அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் மேலும் விசுவாசத்தில் உறுதியாகலாம். இதுவே விழித்துக்கொள்ள மற்றும் புதிய பிறப்பெடுப்பதற்கான தருணம். இயற்கை தானே வழங்குவது போன்று, நீங்களும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எவ்வளவற்றைப் பெற்றுள்ளீர்கள். சமாதானம் மற்றும் அன்பை காவிச்செல்பவர்களாக இருங்கள், இதன்மூலம் நீங்கள் உலகில் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். வானத்தைப் பாருங்கள், அங்கு கவலையோ அல்லது வெறுப்போ...
2020-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை அமைதி வழங்கும் இயேசு பாலனிடம் எடுத்துச் செல்கிறேன். அவரே உங்களோடு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பவர். எனது அன்பான பிள்ளைகளே, உங்களது ஆழமான விசுவாசம் அழிந்துபோக, மற்றும் சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை தளர்ந்து செல்ல அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வேளையிலும் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ஆகவேதான் நான் இயேசுவோடு இங்கு வந்துள்ளேன். இதன்மூலம் அவர் தனது அமைதியின்...
2020-09-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! நான் நீண்ட காலமாக உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் நான் இருக்கும்போது கடவுளின் அன்பு மேலும் அதிகமாக உள்ளது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அழைக்கிறேன், இறைவனிடமும் செபத்திலும் திரும்பி வாருங்கள். அன்பே உங்கள் வாழ்வின் அளவீடாக இருக்கட்டும்இ மறக்காதீர்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் ஒறுத்தலும் உங்களிலும், உங்களைச் சுற்றியும் அதிசயங்களை நிகழ்த்தட்டும். நீங்கள் செயற்படுத்தும் அனைத்தும்இ கடவுளைப் புகழ்வதாக இருக்கட்டும், அத்துடன் வானகத்திலிருந்து உங்கள்...
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2021-02-25
கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். (மத்7:8)
இன்றைய சிறிய வழிச் செபம்
நீதி நீதியை வழங்கும் இறைவா, இன்று நீதியின் பக்கம் உழைக்க அருள்தாரும் ஆமென்
இன்றைய துதி
2021-02-25
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் என்று உள்ளத்தின் மீது விழிப்பாய் இருக்க அழைப்பவரே உம்மை துதிக்கிறேன்(மத்6:21)
ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல்
முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.
உங்கள் Email முகவரி
திருப்பலி செபப்பாடல்கள்
பயனடைந்தோர்
புனித கன்னி மரியாள்
இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)
இறைவாக்குத்தத்தம்
உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)
இறைசித்தம்
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)
திருத்தந்தை
பிரான்சிஸ்
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்தேயு 16:18)
பரிசுத்த ஆவி
நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)
பரிசுத்த ஆவி
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)
இறைவாக்குத்தத்தம்
எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்:
என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். (நீதிமொழிகள் 8:17)
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)